Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில், பாரியூர்

அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில், பாரியூர் – 638 452, ஈரோடு மாவட்டம்.
****************************************************************************************************
+91-4285-222 010 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: – காளியம்மன்(கொண்டத்துக்காரி)

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன் இருக்கலாம்

புராணப் பெயர்: – அழகாபுரி, பராபுரி

ஊர்: – பாரியூர்

மாவட்டம்: – ஈரோடு

மாநிலம்: – தமிழ்நாடு

பாரியூரில் இன்று பெரும் புகழ் பெற்று விளங்கும் கொண்டத்து காளியம்மன் கோயில் எப்பொழுது அமைக்கப்பட்டது என்பதற்கு சான்று ஏதும் கிடையாது.

இக்கோயில் 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சரித்திரப்புகழ் பெற்ற கோயிலாக இருக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த கோயில் பின்பு அப்பகுதி மக்களால் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.

1000 ஆண்டுகள் பழமையான கோயில் இது. இக்கோயிலில் சூரராச் சித்தர் என்பவர் மந்திர சக்தி படைத்தவராக இருந்துள்ளார். மந்திரசக்தியினால் அவருக்கு அன்னை காட்சி தந்ததாகக் கூறப்படுகிறது. சுற்றிலும் பச்சைபசேல் என வயல் வெளிகள் சூழ, மனதுக்கு அமைதி தரும் வகையிலான சுற்று சூழலோடு அமைந்திருக்கிறது.

அம்பாள் கீழ் உள்ள பீடம் 7 பீடமாக அமைந்துள்ளது. இத்தலத்தில் அம்மன் உருத்ரகோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அக்னிகுண்டம் இறங்கல் சிறப்பாகும். இது 40 அடி நீளம் கொண்டது. அம்மன் சிரசில் உருத்ரன் உள்ளார். முடி சுவாலா முடி (நெருப்பு எரிந்து கொண்டிருப்பது போல் இருக்கும்) தாங்கி உருத்ரகாளியாக அமைந்துள்ளார். உருத்ரனின் முகம் அம்மனின் சிரசில் அமைக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு கோடியம்மன் கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு கோடியம்மன் கோயில், தஞ்சாவூர்– 613001, தஞ்சாவூர் மாவட்டம்
**************************************************************************************

+91-93671 82045 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

மூலவர்: – கோடியம்மன்

உற்சவர்: – பச்சைக்காளி, பவளக்காளி

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – தஞ்சபுரி, அழகாபுரி

ஊர்: – தஞ்சாவூர்

மாவட்டம்: – தஞ்சாவூர்

மாநிலம்: – தமிழ்நாடு

தற்போது கோயில் இருக்கும் பகுதி தேவர்கள் தவம் செய்த சோலைவனமாக இருந்தது. அங்கிருந்தபடியே அவர்கள் இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்களுக்கு இணையாக இறைவனை வழிபட்ட தஞ்சன் என்ற அசுரன் தேவர்களுக்கும் அதிகமான தகுதியைப் பெற்றான். தகுதியின் காரணமாக வரம் கிட்டியது. வரத்தின் சக்தியால் தேவர்களைத் துன்பம் செய்துவந்தான். தேவர்கள் ஒன்றுகூடி சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். எனவே இறைவன் தஞ்சபுரீசுவரர் என அழைக்கப்பட்டார். அவர் தனது அம்பிகையான ஆனந்தவல்லியிடம் தஞ்சனை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனந்தவல்லி பச்சைக்காளியாக வடிவெடுத்து அசுரனை அழிக்க வந்தாள். அசுரனோ, மடிய மடிய மீண்டும் தோன்றினான். இவ்வாறு கோடி அவதாரங்கள் எடுத்தான். இதனால் கோபமடைந்த ஆனந்தவல்லியின் முகம் சிவந்தது. அவள் சாந்தத்தை கைவிட்டு பவளக்காளியாக மாறினாள் (பவளம் சிவப்பு நிறம்). தஞ்சனை வதம் செய்தாள். தஞ்சனின் உடலிலிருந்து பெருகிய ரத்தம் ஆறாக ஓடியது. அந்த எதிரொளிப்பில் அம்பாளின் உருவமே சிவப்பானது. கோடி அவதாரம் எடுத்த அசுரனை அழித்ததால் அம்பாள் கோடி அம்மன் என்றும் வழங்கப்பட்டாள்.