Category Archives: ஆலயங்கள்

பூர்ணத்திரயேஸ்வரர் திருக்கோயில், திருப்பூனித்துறை

அருள்மிகு பூர்ணத்திரயேஸ்வரர் திருக்கோயில், திருப்பூனித்துறை, எர்ணாகுளம் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 484 – 277 4007

காலை 4 மணி முதல் 11.15 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூர்ணத்திரயேஸ்வரர்
தீர்த்தம் பல்குண தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருப்பூனித்துறை
மாவட்டம் எர்ணாகுளம்
மாநிலம் கேரளம்

இப்பகுதியில் வாழ்ந்த ஒரு அந்தணர் தம்பதிக்கு நெடுங்காலமாகக் குழந்தை இல்லை. அந்தணருக்கு கடவுள் பக்தி கிடையாது. அவரது மனைவியோ விஷ்ணு பக்தை. தன் கணவனை மன்னித்து, தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என மனைவி அவரை வழிபட்டு வந்தாள். ஆனாலும், பெருமாள் மலடி என்ற இவளது பட்டத்தை தீர்க்கும் வகையில் குழந்தை பாக்கியத்தை தந்தாரே தவிர, பிறந்த குழந்தைகள் எதுவும் பிழைக்கவில்லை. ஒன்பது குழந்தைகள் பிறந்து இறந்தன. இதனால் அந்தணருக்கு பெருமாள் மீது கோபம் இன்னும் அதிகமானது. அந்தணரின் மாமனார், “மருமகனே. தாங்கள் பெருமாளிடம் கோபப்படுவதில் அர்த்தமில்லை. உங்களுக்கு அவர்மீது பக்தி இல்லாததே குழந்தைகளின் மரணத்திற்கு காரணம். பெருமாளை சரணாகதி அடைந்தால் இனிமேல் பிறக்கும் குழந்தை இறக்காதுஎன்றார். ஆனாலும், அந்தணர் அதைக் கண்டுகொள்ளவில்லை. அந்தணரின் மனைவி, தன் கணவன் திருந்தாததையும், பெருமாள் தன்னைச் சோதிப்பதையும் எண்ணி வேதனையில் தவித்தாள்.

பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில், சின்னமனூர்

அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில், சின்னமனூர், தேனி மாவட்டம்.

காலை6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூலாநந்தீஸ்வரர் (அளவுக்களவானவர்)
அம்மன் சிவகாமி
தல விருட்சம் பூலா மரம்
தீர்த்தம் சுரபி தீர்த்தம்
புராணப் பெயர் அரிகேசநல்லூர்
ஊர் சின்னமனூர்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு


சிவபெருமான் பல இடங்களில் சுயம்புவாய் தோன்றுவது போல் சுரபி நதி அருகிலும் சுயம்புவாய் முளைத்துள்ளார். வீரபத்திரர் சாபம் பெற்ற கற்பகதரு இலிங்கத்தின் அருகில் முட்பூலாவாக தோன்றி, பூலாவனமாக ஆகி சிவலிங்கத்திற்கு நிழல் தந்தது. அப்பகுதியை ஆண்ட இராச சிங்க பாண்டியன் சுரபி நதிக்கருகில் தங்கியிருந்தபோது, அவனுக்கு பால் கொடுக்க வரும் இடையன் தினமும் அந்த பூலா மரத்தருகே தடுக்கி விழந்ததனால் கோபம் கொண்டு பூலாமரத்தின் வேரைக் கோடாரியால் வெட்ட ரத்தம் பீறிட்டது. இச்செய்திகேட்டு இராச சிங்கன் அந்த இடம் சென்று உண்மை உணர்ந்தான். அந்த வேரின் அடியில் இருந்த இலிங்கத்தை வணங்கினான். உடனே குருதி மாறி விசுவரூபமெடுத்த இறைவன், மன்னனின் வேண்டுகோளுக்காக,”அளவுக்கு அளவாகக்குறுகி நின்றருளினார். ஆனந்தம் பொங்க இலிங்க வடிவான இறைவனை மன்னன் கட்டித் தழுவினான்.