Category Archives: ஆறுபடை வீடுகள்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்.

+91-4639 – 242 221 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுப்பிரமணியசுவாமி
உற்சவர் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள்
அம்மன் வள்ளி, தெய்வானை
தீர்த்தம் சரவணபொய்கை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

சீரலை வாயில்

ஊர் திருச்செந்தூர்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

தேவர்கள் தங்களைத் தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறைத் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், “ஜெயந்திநாதர்என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே செந்தில்நாதர்என மருவியது. தலமும் திருஜெயந்திபுரம்‘ (ஜெயந்தி வெற்றி) என அழைக்கப்பெற்று, “திருச்செந்தூர்என மருவியது.

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை, அழகர்கோவில்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை, அழகர்கோவில், மதுரை மாவட்டம்.

+91- 452-247 0228 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுப்பிரமணிய சுவாமி தம்பதியர்
அம்மன் வள்ளி, தெய்வயானை
தல விருட்சம் நாவல்
தீர்த்தம் நூபுர கங்கை, சிலம்பு ஆறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் சோலைமலை (அழகர்கோயில்)
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

ஓளவையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் ஓளவைக்கு அருள் புரிந்து, இந்தஉலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார். ஒரு முறை ஓளவை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, ஓளவை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார். களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, “என்ன பாட்டி. மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பைப் போக்க நாவல் பழங்கள் வேண்டுமா?” என்றான். சந்ததோஷப்பட்ட ஓளவை வேண்டும்என்றார். உடனே முருகன்,”பாட்டி. தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?”என்றான். இதனைக்கேட்டு திகைப்படைந்த ஓளவை ஏதும் புரியாமல்,”சுட்ட பழத்தையே கொடேன்என்றார். சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. ஓளவை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன்,”பாட்டி. பழம் மிகவும் சுடுகின்றதா? ஆறியவுடன் சாப்பிடுங்கள்என்று கூறி சிரித்தான்.