Category Archives: திருமால் ஆலயங்கள்

அருள்மிகு யோகராமச்சந்திர மூர்த்தி திருக்கோயில், படவேடு

அருள்மிகு யோகராமச்சந்திர மூர்த்தி திருக்கோயில், படவேடு, திருவண்ணாலை மாவட்டம்.

+91 4181-248 224, 94435 40660

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை மணி 3 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

யோக ராமச்சந்திரர்

உற்சவர்

கோதண்டராமர்

தாயார்

செண்பகவல்லி

தல விருட்சம்

செண்பகமரம்

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

செண்பகாரண்யம்

ஊர்

படவேடு

மாவட்டம்

திருவண்ணாமலை

மாநிலம்

தமிழ்நாடு

உலகத்தின் தோற்றம் மற்றும் அதன் இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது வேதங்கள் ஆகும். இத்தகைய வேதத்திற்கு மூலமாக இருப்பவர் யார்? அதை இயற்றியவர் யார்? அதன் சாரம் என்ன?” என ஆஞ்சநேயருக்கு சந்தேகம் உண்டானது. தன்னுடைய சந்தேகம் தீர்க்கும்படி ஆஞ்சநேயர், இராமபிரானை வேண்டினார். சுவாமி சின்முத்திரை காட்டிய தனது வலது கையை நெஞ்சில் வைத்து, “எல்லா உயிர்களுக்குள்ளும் பரமாத்மா என்னும் இறைவன் இருப்பதைப்போல, நானே வேதமாகவும், வேதத்திற்குள் அதன் தத்துவமாகவும் இருக்கிறேன்என்று உணர்த்தினார். இந்த அமைப்பில் அமைந்துள்ள கோயில் இது. யோக நிலையில் இருப்பதால் சுவாமிக்கு, “யோக ராமச்சந்திரமூர்த்திஎன்ற பெயர் ஏற்பட்டது.

புஷ்பக விமானத்தின் கீழ், இராமபிரான் வீராசனத்தில் அமர்ந்து, சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்திருக்கிறார். அருகில் சீதாப்பிராட்டி அமர்ந்திருக்கிறாள். இராமர், சீதை இருவரின் சிலையும் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி வடிக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு அருகில், ஆஞ்சநேயர் அமர்ந்து கையில் ஓலைச்சுவடி வைத்திருக்கிறார். ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்தவர் என்பதால், இவர் இங்கு குரு அம்சமாக போற்றப்படுகிறார். எனவே, சக்கரவர்த்திக்குரிய போர் ஆயுதங்கள் எதுவும் இல்லை. அருகிலுள்ள இலட்சுமணர் மட்டும் கையில் வில், அம்பு வைத்திருக்கிறார்.

அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோயில், நல்லூர்

அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோயில், நல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்.

+91- 44 – 4211 3345, +91 4183 243 157, 94452 32457 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பிரசன்ன வெங்கடேசர்

தாயார்

சுந்தரவல்லி

தல விருட்சம்

வில்வம்

தீர்த்தம்

கிணற்று தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

சுந்தரவரதராஜபுரம், சதுர்வேதிமங்கலம்

ஊர்

நல்லூர்

மாவட்டம்

திருவண்ணாமலை

மாநிலம்

தமிழ்நாடு

முன்னொருகாலத்தில் தலயாத்திரை சென்ற அந்தணர்கள் சிலர் இத்தலத்தில் தங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெருமாள் சிலையை இங்கு வைத்துப் பூஜை செய்தனர். மறுநாள் அவர்கள் கிளம்பியபோது, அவ்விடத்தில் இருந்து சிலையை எடுக்க முடியவில்லை. அப்போது மகாவிஷ்ணு காட்சிகொடுத்து, தான் அத்தலத்தில் தங்க விரும்புவதாகக் கூறினார். அந்தணர்கள் மகிழ்ச்சியுடன், அங்கு கோயில் எழுப்பினர். அந்தக் கோயில் பாழடையவே, பிற்காலத்தில் புதிய கோயில் கட்டப்பட்டது. சுவாமி அழகாக இருப்பதால் சுந்தர வரதராஜர்என்று அழைக்கப்படுகிறார்.

பழைய கோயிலில் இருந்த மூலவர் தனிசன்னதியில் இருக்கிறார். விழாக்கள் மற்றும் பூஜையின்போது இவருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது. ஒரே கல்லில் இவரது சிலை அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கிறது. இவர் பிரயோக சக்கரம், வலம்புரி சங்கு மற்றும் இடதுகீழ் கையில் தண்டம் வைத்தபடி அருளுகிறார். இவரை வணங்கினால் கல்வியில் சிறந்து திகழலாம் என்பது நம்பிக்கை. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். சுவாமியின் பீடத்தில் ஆஞ்சயேர் மண்டியிட்டு வணங்கியபடியும், மகரிஷிகள் தவம் செய்தபடியும் இருப்பது விசேஷம். மேலே கந்தர்வர்கள் உள்ளனர்.