Category Archives: திருமால் ஆலயங்கள்

அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், மலையடிப்பட்டி

அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், மலையடிப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்.

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

(நன்றி: தினமலர்)

மூலவர் ரங்கநாதர்
தாயார் கமலவல்லி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் மலையடிப்பட்டி
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் குடைவரைக் கோயிலைப் போலவே சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரே குன்றின்மீது தனித்தனியே அருகருகே எழுப்பப்பட்டுள்ள இரு குகைக் கோயில்கள்தான் மலையடிப்பட்டி கோயில். ஆலயக் கல்வெட்டுகளில் இவ்வூர், திருவாலத்தூர் மலை என்று காணப்படுகிறது.

அனந்தசயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு கோயில், திருப்பதிக்கு நிகரானது என்கிறார்கள். இங்குள்ள சிவன் கோயில், திருமால் கோயிலைவிட, காலத்தால் முற்பட்டது. இக்கோயிலில் நந்திவர்ம பல்லவன் காலத்துக் கல்வெட்டு (கி.பி 775-826) இருக்கிறது. அந்தக் கல்வெட்டில் இக்கோயில் 16-வது ஆட்சியாண்டில், அதாவது கி.பி. 730-ல் குவாவன் சாத்தன் என்பவரால் மலையைக் குடைந்து சிவனுக்குக் கோயில் எடுத்து, வாகீஸ்வரர் எனப் பெயரிட்டதாகச் செய்தி காணப்படுகிறது.

அருள்மிகு இராமர் பாதம், இராமேசுவரம்

அருள்மிகு இராமர் பாதம், இராமேசுவரம், இராமநாதபுரம் மாவட்டம்.

+91-4573-221223; 91-4573-221255 (மாற்றங்களுக்குட்பட்டவை)

ராமருக்கே தோஷம் நீக்கிய தலம்

ஸ்ரீராம தீர்த்தம், ராமேஸ்வரம் திருத்தலத்தில், ராமநாதர் கோயிலுக்கு வெளியே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு ராமபிரான், நாகர் சிலை பிரதிஷ்டை செய்திருக்கிறார் என்கிறார்கள். ராவணனிடமிருந்து சீதையை மீட்பதற்கு வழி கிடைக்க, திருப்புல்லாணிக்கு அருகிலிருக்கும் கடலில் நவபாஷாணக் கல்லில் நவகிரகங்கள் நிறுவி வழிபட்டார் ராமர். அத்துடன் திருப்புல்லாணி தலத்தில் தர்ப்பையில் அமர்ந்து கடலரசனிடம், இலங்கைக்குச் செல்லப் பாலம் அமைக்க வழி கேட்டார். பிறகு, இலங்கைக்கு அனுமன் மற்றும் வானரப் படைகள் உதவியுடன் பாலம் அமைத்துச் சென்று இராவணனோடு போரிட்டு சீதையை மீட்டார். இராவணனைக் கொன்ற தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரை (அக்னி தீர்த்தம்) அருகில் சிவலிங்கம் நிறுவி பூஜித்து, தோஷ நிவர்த்தி பெற்றார். இராமர் நிறுவிய இலிங்கம்தான் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இராமேஸ்வரம் இராமநாதர்.