Category Archives: 108 திவ்விய தேசங்கள்

அருள்மிக மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில், தென்திருப்பேரை

அருள்மிக மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில், தென்திருப்பேரை – 628 623, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகரநெடுங் கு‌ழைக்காதர்
உற்சவர் நிகரில் முகில் வண்ணன்
தாயார் குழைக்காது வல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார்
தீர்த்தம் சுக்ரபுஷ்கரணி, சங்க தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பேரை
ஊர் தென்திருப்பேரை
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

இங்குள்ள ஆலயம் மிகப்பெரியதாகும். பூதேவி, துர்வாசர் உபதேசித்த அஷ்டாட்சர மந்திரத்தை ஜபித்து, தவம் செய்து, தாமிரபரணியில் மூழ்கி எழும்போது இரண்டுபெரிய குண்டலங்களைப் பெற்றாள். ஸ்ரீபேரை என்ற திருநாமம் பெற்றாள். பங்குனி பவுர்ணமியில் தாமிரபரணியில் பெற்ற மீன்வடிவமுள்ள இரண்டு குண்டலங்களைப் பெருமாளுக்கு சமர்ப்பிக்க, பகவான் அவைகளை அணிந்ததால் மகரநெடுங்கு‌ழைக்காதன் என்ற நாமம் பெற்றார். பூமி‌தேவி ஸ்ரீபேரை என்ற நாமம் பெற்றதால், இத்தலத்திற்குத் திருப்பேரை என்ற பெயர் ஏற்பட்டது. வருணன் குருவை நிந்த‌ை செய்த பாவம் விலக பங்குனி பவுர்ணமியில் பகவானுக்கு திருமஞ்சனம் செய்து, பாவம் விலகி நன்‌மை அடைந்ததாகத் தல வரலாறு கூறுகிறது.

அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், ஸ்ரீ வைகுண்டம்

அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், ஸ்ரீ வைகுண்டம் – 628601 தூத்துக்குடி மாவட்டம்.

+91 4630 256 476 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகிய அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம்

மூலவர் கள்ளபிரான் (ஸ்ரீ வைகுண்டநாதர்)
கிரகம் சூரிய ஸ்தலம்
தாயார் வைகுந்த நாயகி (கள்ளர்பிரான் நாச்சியார் , சோரநாத நாயகி)
தீர்த்தம் தாமிரபரணி தீர்த்தம், பிருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் ஸ்ரீ வைகுண்டம்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

கோமுகன் என்னும் அசுரன், பிரம்மாவிடமிருந்து வேத சாஸ்திரங்களைத் திருடிச்சென்றான். இதனால் படைப்புத்தொழில் நின்று போனது. வருந்திய பிரம்மா, மகாவிஷ்ணுவை வேண்டி, பூலோகத்தில் தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த சுவாமி, அசுரனை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். பிரம்மாவின் வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளி, “வைகுண்டநாதர்என்ற திருநாமம் பெற்றார்.