அருள்மிக மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில், தென்திருப்பேரை

அருள்மிக மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில், தென்திருப்பேரை – 628 623, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகரநெடுங் கு‌ழைக்காதர்
உற்சவர் நிகரில் முகில் வண்ணன்
தாயார் குழைக்காது வல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார்
தீர்த்தம் சுக்ரபுஷ்கரணி, சங்க தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பேரை
ஊர் தென்திருப்பேரை
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

இங்குள்ள ஆலயம் மிகப்பெரியதாகும். பூதேவி, துர்வாசர் உபதேசித்த அஷ்டாட்சர மந்திரத்தை ஜபித்து, தவம் செய்து, தாமிரபரணியில் மூழ்கி எழும்போது இரண்டுபெரிய குண்டலங்களைப் பெற்றாள். ஸ்ரீபேரை என்ற திருநாமம் பெற்றாள். பங்குனி பவுர்ணமியில் தாமிரபரணியில் பெற்ற மீன்வடிவமுள்ள இரண்டு குண்டலங்களைப் பெருமாளுக்கு சமர்ப்பிக்க, பகவான் அவைகளை அணிந்ததால் மகரநெடுங்கு‌ழைக்காதன் என்ற நாமம் பெற்றார். பூமி‌தேவி ஸ்ரீபேரை என்ற நாமம் பெற்றதால், இத்தலத்திற்குத் திருப்பேரை என்ற பெயர் ஏற்பட்டது. வருணன் குருவை நிந்த‌ை செய்த பாவம் விலக பங்குனி பவுர்ணமியில் பகவானுக்கு திருமஞ்சனம் செய்து, பாவம் விலகி நன்‌மை அடைந்ததாகத் தல வரலாறு கூறுகிறது.

நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி

1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்

2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)

3. செவ்வாய் : திருக்கோளுர்

4. புதன் : திருப்புளியங்குடி

5. குரு : ஆழ்வார்திருநகரி

6. சுக்ரன் : ‌தென்திருப்பேரை

7. சனி : பெருங்குளம்

8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலை வில்லிமங்கலம்)

9. கேது : 2. இரட்டைத் திருப்பதி

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. நவ திருப்பதிகளில் இது 6 வது திருப்பதி (தென்திருப்பேரை). நவகிரகங்களில் இது சுக்ரன் தலம்

இத்தலத்தில் மகரநெடுங் குழைக்காதர் பெருமாள் பத்ர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்

பாடியவர்கள்:

நம்மாழ்வார் மங்களாசாசனம்

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாணெனக் கில்லை என் தோழிமீர்காள் சிகரமணி நெடுமாட நீடு தென் திருப்பேரையில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக் காதன் மாயன்நூற்றுவரை அன்று மங்க நூற்ற நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை யூழியானே.

நம்மாழ்வார்

திருவிழா: வைகுண்ட ஏகாதசி

பிரார்த்தனை:

அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

இருப்பிடம் :

‌நெல்லை, திருச்செந்தூரிலிருந்து பஸ்ஸில் சென்று தரிசிக்கலாம். எனினும் வாடகைக் கார், அல்லது வேன் எடுத்துக்‌கொள்வது நலம்.

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : ஆழ்வார் திருநகரிலிருந்து 3 மைல் ‌தொலைவில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து – 39 கி.மீ.,

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி, திருச்‌செந்தூர்.

அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம், மதுரை.

தங்கும் வசதி : திருநெல்வேலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *