Tag Archives: திருப்புகலூர்

அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்

அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 292 300, +91- 94431 13025 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வர்த்தமானீஸ்வரர்
உற்சவர் கல்யாண சுந்தரர்
அம்மன் மனோன்மணி
தல விருட்சம் பின்னை
தீர்த்தம் அக்னி தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சரண்யபுரம்
ஊர் திருப்புகலூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

வருணன், வாயு, அக்னி மூவருக்கும் ஒருசமயம் போட்டி உண்டானது. இதில் வருணனும், வாயுவும் சேர்ந்து அக்னியை, சக்தியில்லாமல் போகும்படி செய்துவிட்டனர். அக்னி சக்தி இழந்ததால், தேவலோகம், பூலோகத்தில் மகரிஷிகளால் யாகம் நடத்த முடியவில்லை. எனவே அக்னி தனக்கு மீண்டும் சக்தி வேண்டி சிவனை வேண்டினான். பூலோகத்தில் தன்னை வழிபட மீண்டும் சக்தி கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி இங்கு வழிபட்ட அக்னிக்கு சிவன், சக்தி தந்து 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் கொண்ட உருவத்தையும் கொடுத்தருளினார். அவர் வழிபட்ட சிவன் இத்தலத்தில் அக்னீஸ்வரராகவும், வர்த்தமானீஸ்வரராகவும் இங்கு எழுந்தருளியுள்ளனர். நாயன்மார்களில் ஒருவரான முருகனார் இத்தலத்தில் பிறந்தவர். சிவபக்தரான அவர் மலர்களை பறித்து, மாலையாக தொடுத்து தினமும் வர்த்தமானீஸ்வரரை வழிபட்டு வந்தார். இங்கு வணங்க வரும் பக்தர்களுக்காக மடம் ஒன்றையும் கட்டினார். திருஞானசம்பந்தரின் நண்பரான இவர், சீர்காழி அருகிலுள்ள திருப்பெருமணநல்லூரில் (ஆச்சாள்புரம்) சம்பந்தர் திருமணத்தில் கலந்து கொண்டார். சம்பந்தருடன் சேர்த்து ஜோதியில் ஐக்கியமாகி முக்தி பெற்றார். சிவன் இவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.

இளங்கோயில்: வர்த்தமானீஸ்வரருக்கு எதிரில் முருக நாயனார், கையில் மலர்மாலை வைத்தபடி காட்சி தருகிறார். அம்பிகை மனோன்மணி, முன்மண்டபத்தில் காட்சி தருகிறாள். பூஜையின்போது சுவாமிக்கு வாசனை மலர்மாலை அணிவித்து, மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். இக்கோயிலில் வர்த்தமானீஸ்வரருக்கு வலதுபுறத்தில் அக்னீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். வர்த்தமானீஸ்வரர் திருஞானசம்பந்தராலும், அக்னீஸ்வரர் மூவராலும் பாடல் பெற்றவர்கள் ஆவர். வர்த்தமானீஸ்வரர், அக்னீஸ்வரர் இருவரது சன்னதியையும் சேர்த்தே சுற்றி வந்து வணங்க முடியும். வர்த்தமானீஸ்வரர் சன்னதியை தனியே வலம் வர முடியாது. இவருக்கென தனி கொடிமரம், கோஷ்ட தெய்வங்களும் இல்லை. இக்கோயிலை இளங்கோயில்என்று அழைக்கிறார்கள். நுழைவுவாயிலை அடுத்து அக்னி பகவான் மூலவராக இருப்பது விசேஷ அம்சம். திருநாவுக்கரசர் முக்தியடைந்த தலம் இது. சுந்தரருக்காக சிவன், செங்கற்களை தங்கமாக மாற்றி இத்தலத்தில் அருள்புரிந்தார்.

அருள்மிகு சரண்யபுரீஸ்வரர் உடனுறை கருந்தார்குழலி திருக்கோயில், திருப்புகலூர்

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர்(சரண்யபுரீஸ்வரர்) உடனுறை கருந்தார்குழலி திருக்கோயில், திருப்புகலூர், திருக்கண்ணபுரம் வழி, திருவாரூர் மாவட்டம்.

+91- 4366-237 198, 273 176, 94431 13025, 94435 88339 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சரண்யபுரீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான்
அம்மன் கருந்தார் குழலி, சூளிகாம்பாள்
தல விருட்சம் புன்னை மரம்
தீர்த்தம் அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்புகலூர்
ஊர் திருப்புகலூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்

ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால் உலகில் யாகம் முதலியன நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட இலிங்க பூஜை செய்தனர். அவரது உத்தரவுப்படி அக்னி பகவான் மீண்டும் வந்தார். அவருக்கு இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை, ஏழு ஜூவாலையுடன் சிவன் ஒரு உருவத்தையும் படைத்தார். அக்னி பகவானுக்கு அனுக்கிரகம் செய்ததால் இறைவனுக்கு அக்னீஸ்வர சுவாமிஎன்ற பெயர் ஏற்பட்டது. சரண்ய மகராஜா என்பவரால் பூஜிக்கப்பட்டதால் சரண்யபுரீஸ்வரர்என்ற பெயரும் ஏற்பட்டது. அக்னீஸ்வரர் கோயிலின் நான்குபுறமும் அகழி சூழ்ந்திருந்தது. கோயிலுக்குள் செல்ல வழியில்லாததால், முன்பகுதி அகழியை தூர்த்து வழி ஏற்படுத்தினர். ராஜராஜன் காலத்து கல்வெட்டுகள் இருப்பதன் மூலம் தொன்மையான கோயில் என்று தெரிய வருகிறது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி ஆகியோரால் பாடல் பெற்றது. 6 அல்லது 7ம் நூற்றாண்டு கோயிலாக இது இருக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.