Tag Archives: தஞ்சாவூர்

பிரகதீசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு பிரகதீசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 4362- 274476, 223 384

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரகதீசுவரர் , பெருவுடையார்
அம்மன் பெரியநாயகி, வராகியம்மன்
தல விருட்சம் வன்னி மரம்
தீர்த்தம் சிவகங்கை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

இராஜராஜசோழன் சிவபெருமான் மீது கொண்டிருந்த பக்தியால் அவருக்கு ஆத்மார்த்தமாக ஒரு கோயிலை கட்ட விரும்பினான்.

அந்த கோயில் பிரமாண்டமாக இதுவரை யாரும் கட்டாத அளவுக்கு கட்டவேண்டுமென நினைத்தான். அப்படிக் கட்டப்பட்ட கோயில் இந்த உலகம் வியக்கும் உன்னதமான கோயில் (கி.பி.985 – 1012).

இக்கோயிலைக் கட்ட வெளி மாவட்ட, வெளி மாநிலங்களிலிருந்துதான் கற்கள் அனைத்துமே கொண்டுவரப்பட்டிருக்கிறது. கற்களைச் செதுக்கி ஒரு வடிவத்துக்கு கொண்டு வர 25 வருடங்கள் ஆகியதாம். செதுக்கிய கற்களை எடுத்துப் பதப்படுத்த 9 வருடங்கள் ஆனதாம். ஆக மொத்தம் 34 வருடங்கள் ஆகியதாம். கோபுரம் மட்டுமே தரைத்தளத்திலிருந்து 216 அடி உயரமுடையது. அதன் உச்சியில் உள்ள வட்ட வடிவ பிரம்மமந்திரக்கல் 80 டன் எடையுள்ளது. ஒரே கல்லிலாலானது. இங்கிருந்து 7 கி.மீ.தூரத்திற்கு சாரபள்ளம் என்ற ஊர் வரை மணல் கொட்டி அந்த ஒரே ஒரு கல்லை மட்டும் மேலே கொண்டு சென்றனராம். இக்கோபுரம் மேலே உள்ள கலசத்தின் நிழல் கீழே விழாதபடி கட்டப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளின் கட்டிடக் கலை வல்லநர்கள் வந்து பார்த்து வியந்து போன கோயில் இது.

கருவூரார் என்பவர் சித்தர். இவர் அறிவுரைப்படிதான் இராஜராஜசோழன் இக்கோயிலை கட்டியதாக வரலாறு. கோயில் கட்டுவதற்கு முன்பு கருவூரார் இங்கு ரொம்ப காலமாக தியானத்தில் இருந்திருக்கிறார். கோயில் கட்டும்போது முதலில் சுவாமியின் மேல்பாணம் சரியாக பொருந்தவில்லையாம். கருவூரார் மிகவும் வருந்தி ஈசனை நினைத்து உருகி 11 திருவிசைப்பாக்களை பாடியபின்தான் பாணம் பொருந்தியதாகத் தகவல் ஒன்று கூறுகிறது. நாவினால் உமிழ்ந்த என்ற திருவிசைப்பா புகழ் பெற்றது. கருவூரார்க்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.

அருள்மிகு நீலமேகப்பெருமாள் கோயில் (மாமணிக்கோயில்), தஞ்சாவூர்

அருள்மிகு நீலமேகப்பெருமாள் கோயில் (மாமணிக்கோயில்), தஞ்சாவூர் – 613 003.

+91- 4362 – 223 384 (மாற்றங்களுக்குட்பட்டது)

வீரநரசிம்ம பெருமாள் கோயில் காலை 7 – 12 மணி, மாலை 5 – 8.30 மணி வரையில் திறந்திருக்கும்.    மற்ற இரண்டு கோயில்களுக்கு செல்ல இங்கிருந்து அர்ச்சகரை அழைத்துச் செல்லவேண்டும்.

மூலவர் நீலமேகர், வீரநரசிம்மர், மணிகுன்றர்
உற்சவர் நாராயணர்
தாயார் செங்கமலவல்லி, தஞ்சைநாயகி, அம்புஜவல்லி
தல விருட்சம் மகிழமரம்
தீர்த்தம் அமிர்த தீர்த்தம்
ஆகமம் வைகானஸம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தஞ்சமாபுரி
ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு அதன் கரையில் ஆசிரமம் அமைத்து, தவம் செய்து வந்தார். அப்போது சிவனிடம் சாகாவரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் பராசரரையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொல்லை செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை. எனவே அசுரர்களை அழிக்கும்படி சிவனிடம் வேண்டினார் பராசரர். சிவன் மாயா சக்தியாக காளிதேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும், மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப்படுத்தினர்.