Tag Archives: கரூர்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கரூர்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கரூர் கரூர் மாவட்டம்.
***********************************************************************

+91-4324- 246 0146 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்(மகாமாரி)

பழமை: – 100 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – கருவூர்

ஊர்: – கரூர்

மாவட்டம்: – கரூர்

மாநிலம்: – தமிழ்நாடு

இத்திருக்கோயில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாகத்தான் தோன்றியது.

கிரமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து இத்திருக்கோயில் தற்சமயம் உள்ள இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இது சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற்போல உள்ள பெரியதொரு வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

வைகாசிப் பெருந்திருவிழாவின் போது நடக்கும் கம்பம் நடும் விழா மிகவும் சிறப்பானது.

அருள்மிகு மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறாள்.

பூச்சொரிதல்:

இக்கோயிலில் விசேச அபிசேக ஆராதனையுடன் கம்பத்துக்குத் தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள். தயிர் சாதப் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.