அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கரூர்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கரூர் கரூர் மாவட்டம்.
***********************************************************************

+91-4324- 246 0146 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்(மகாமாரி)

பழமை: – 100 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – கருவூர்

ஊர்: – கரூர்

மாவட்டம்: – கரூர்

மாநிலம்: – தமிழ்நாடு

இத்திருக்கோயில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாகத்தான் தோன்றியது.

கிரமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து இத்திருக்கோயில் தற்சமயம் உள்ள இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இது சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற்போல உள்ள பெரியதொரு வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

வைகாசிப் பெருந்திருவிழாவின் போது நடக்கும் கம்பம் நடும் விழா மிகவும் சிறப்பானது.

அருள்மிகு மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறாள்.

பூச்சொரிதல்:

இக்கோயிலில் விசேச அபிசேக ஆராதனையுடன் கம்பத்துக்குத் தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள். தயிர் சாதப் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

திருமண தத்துவம்:

மனிதன் தோன்றுவது அன்னையின் வயிற்றில்; மறைவது பூமித்தாயின் வயிற்றில். எப்படித் தோன்றுகிறோமோ அதிலேயே மறைவோம் என்பதே இதில் அடங்கியுள்ள தத்துவம். இதன் உண்மை வடிவமே மாரியம்மன். அந்த வகையில் இந்த ஆலயத்தில் அம்மன் பிரசாதமாக வழங்கப்படுவது திருமண் மட்டுமே.

மஞ்சள் நீர்க் கம்பம்:

உற்சவத்தின் போது வேப்பமரத்தின் மூன்று கிளைகளை உடைய ஒரு பகுதியை எடுத்து வந்து, அதில் இருக்கும் பட்டைகளை உரித்து வடிவமைத்து, மஞ்சள் சொருகப்பட்டு, பூசை செய்து ஆற்றிலிருந்து எடுத்து வரப்பட்டு, ஆலயத்தின் பலிபீடத்தின் அருகில் கம்பம் நடப்படும். இதை அம்மனாகக் கருதுகிறார்கள். இது மஞ்சள் நீர்க் கம்பம் என்று அழைக்கப்படுகிறது.

வைகாசிப் பெருந்திருவிழா – 21 நாட்கள் நடக்கும். இந்த திருவிழாதான் இத்தலத்தின் மிகப்பெரும் திருவிழா. தவிர ஆடிவெள்ளி, நவராத்திரி, தீபாவளி பெரிய கார்த்திகை, பொங்கல், தை வெள்ளி, பங்குனி மாதத்தில் நடக்கும் கும்பாபிசேக ஆண்டுவிழா, பங்குனி உத்திரத் திருவிழா நாட்களின் போதும் பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.

அம்மை முதலான நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமற் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.

மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இம்மாரித் தாய் இருப்பதால் இங்கு வரும் தனது பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அக்னிச் சட்டி ஏந்துதல், அலகு குத்தல், காவடி எடுத்தல், பால் குடம் சுமத்தல், மாவிளக்கு வைத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவை அம்மனுக்குக் கைம்மாறு செய்தலாம். இவை தவிர நீர்மோர், பானகம், வடை பருப்பு வைத்து வழிபாடு நடத்தலாம். பால் அபிசேகம் செய்யலாம். திருவிளக்கு பூஜை நடத்தலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *