Monthly Archives: July 2011

அருள்மிகு வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில், இசையனூர்

அருள்மிகு வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில், இசையனூர், ஆற்காடு தாலுக்கா, வேலூர் மாவட்டம்.

கலியுகத்தில் முதற்பகுதியில் இருந்தவர் ஸ்யமந்தகர் எனும் மகரிஷி. அவரது மனைவி மானஸாதேவி. கண்ணனிடம் பரமபக்தி கொண்டவர். ஸ்ரீகிருஷ்ணனை இம்மகரிஷியும், அவரது மனைவியும் ஆராதிக்காமல் ஒருதுளி நீரும் பருகுவதில்லை. ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைத் தினமும் பாராயணம் செய்து, தங்கள் வாழ்நாளைக் கழித்து வந்தனர். எங்கெல்லாம் தனது அவதார காலத்தில் கண்ணன் லீலைகள் புரிந்தானோ, அந்தப் புண்ணிய சேத்திரங்கள் அனைத்தையும் மனைவியுடன் சென்று தரிசிப்பதில் ஆனந்தம் அடைந்து வந்தார் ஸ்யமந்தகர்.

கோகுலம், ஆயர்பாடி, மதுரா, பிருந்தாவனம், துவாரகை என்று எந்த இடங்களில் எல்லாம் கண்ணனின் திருவடிகள் பட்டிருக்குமோ அங்கெல்லாம் சென்று தரையிலும், மண்ணிலும் விழுந்து புரள்வார். கண்ணனின் திருவடிகள் எங்காவது பட்டிருக்கும்; அவ்விதம் அந்தப் பிரபுவின் திருவடிகள் பட்ட இடம் தனது உடலில் படவேண்டும் என்று புரண்டு வருவது வழக்கம். இந்த பிரம்மரிஷியின் ஸ்ரீகிருஷ்ண பக்தி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

அருள்மிகு வெங்கடாசலபதி (தென்திருப்பதி) திருக்கோயில், மேலத்திருவேங்கடநாதபுரம்

அருள்மிகு வெங்கடாசலபதி (தென்திருப்பதி) திருக்கோயில், மேலத்திருவேங்கடநாதபுரம் – 627 006, திருநெல்வேலி மாவட்டம் .

+91- 462 – 2341292, 2340075 97918 66946 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருவேங்கடமுடையான்
உற்சவர் ஸ்ரீநிவாஸன்
தாயார் அலமேலு
தல விருட்சம் நெல்லி
தீர்த்தம் ஸ்ரீநிவாச தீர்த்தம்
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநாங்கோயில்
ஊர் மேலத்திருவேங்கடநாதபுரம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

பலநூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதி வைப்ராஜ்ஜியம்என்ற பெயரில் அடர்ந்த வனமாக இருந்தது. இங்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் வியாசமாமுனிவரின் முதன்மைச்சீடரான பைலர், ஸ்ரீநிவாஸப்பெருமாளை நினைத்து தவம் செய்தார். அங்கு பெருமாளின் திருவுருவமோ, சிலையோ ஏதுமில்லாததால் தன் மனதில் திருமாலை எண்ணிக்கொண்டே, கோடி மலர்களைத் தூவி வணங்கினார். ஏழாம் நாளில் பெருமாளை எண்ணி அவர் அர்ச்சனை செய்த மலர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து மிகப்பெரும் ஜோதியாக வானில் உயரே எழுந்தன. ஜோதியின் நடுவே, காலடியில் தாமிரபரணி நதி தாய் வீற்றிருக்க, ஸ்ரீநிவாஸப்பெருமாள் எழுந்தருளி பைலருக்கு அருட்காட்சிதந்தார். அவரது அருள்வடிவமான திருக்கோலத்தைக் கண்டு தரிசனம் செய்து ஆனந்தக் கூத்தாடிய பைலர் வடக்கே திருப்பதி வெங்கடாஜலபதியாக குடிகொண்டு அருள்வது போல இவ்விடத்திலும் வீற்றிருந்து பக்தர்களுக்கு திருவருள் புரிய வேண்டுமென வேண்டிக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஸ்ரீநிவாஸர் ஏற்றுக்கொண்டார். ஸ்ரீதேவி, பூதேவி, அலர்மேலுமங்கை சமேதராக ஸ்ரீ நிவாஸப் பெருமாள் இங்கேயே தங்கினார்.