Category Archives: தர்மபுரி

மல்லிகார்ச்சுனர் கோயில், தர்மபுரி

அருள்மிகு மல்லிகார்ச்சுனர் கோயில், தர்மபுரி, தர்மபுரி மாவட்டம்.

மூலவர் மல்லிகார்ச்சுனர்
அம்மன் காமாட்சியம்மை
தல விருட்சம் வேளா மரம்
ஊர் தர்மபுரி
மாவட்டம் தர்மபுரி
மாநிலம் தமிழ்நாடு

இப்பதி இன்று தர்மபுரிஎன்று வழங்குகிறது. அதியமான் ஆண்ட நகரம். இங்குள்ள அதியமான் கோட்டை சொல் வழக்கில் திரிந்து அதமன் கோட்டைஎன்றாயிற்று. அதியமான் கோட்டை முழுவதுமாக அழிந்து சுவடுகள் மறைந்து போயின. ஒரு சிறு கிராமம் மட்டுமே அங்குள்ளது.

ஐராவதம், இராமர், துர்வாசர், அர்ச்சுனன் முதலியோர் வழிபட்ட தலம்.

இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும்.

மூலவர் சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி.

ஒளவைப் பெருமாட்டிக்குத் தமிழின்பால் கொண்ட விருப்பத்தால், கிடைத்தற்கரிய நெல்லிக் கனியைத் தான் உண்ணாது ஒளவைக்குத் தந்த அதியமான் ஆண்ட பகுதி தகடூர்.

கோட்டைக் கோயில்” – “கோட்டை ஈஸ்வரன் கோயில்” – “தகடூர் காமாட்சி கோயில்என்று கேட்டால்தான் மக்களுக்குத் தெரிகிறது. “கோட்டை சிவன் கோயில்என்றே இக்கோயில் வழங்குகிறது.

மக்கள் அம்பாளைத் தகடூர் காமாட்சி என்றழைக்கின்றனர்.