Category Archives: சேலம்

சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், ஏத்தாப்பூர்

அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், ஏத்தாப்பூர், சேலம் மாவட்டம்.

+91- 4282 – 270 210

காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாம்பமூர்த்தீஸ்வரர்
உற்சவர் உமாமகேஸ்வரர்
அம்மன் மனோன்மணி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் வசிஷ்டநதி
ஆகமம் காமிகம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வசிஷ்டாரண்யம்
ஊர் ஏத்தாப்பூர்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

சிவனுக்கு அழைப்பு விடுக்காமல், தட்சன் தன்னலம் கருதி ஒரு யாகம் நடத்தினான். யாகத்திற்கு செல்ல வேண்டாம் என அம்பாளிடம், சிவன் சொல்லியிருந்தும் அவர் மனம் பொறுக்காமல் சென்றுவிட்டார். இதனால், சிவன் கோபம் கொண்டார். தனித்திருந்த அவர், மனஅமைதி வேண்டி இத்தலத்தில் தங்கினார். அம்பாள், சிவனின் கோபம் தணிக்க வேண்டி தனது அண்ணன் மகாவிஷ்ணுவுடன் வந்து சுவாமியை வணங்கி தவமிருந்தார். இங்குள்ள வில்வ மரத்தின் அடியில் சிவன் காட்சி தந்து அம்பாளை மன்னித்தார். இவ்விடத்தில், சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். பிரகாரத்தில் இம்மரம் உள்ளது. பிரிந்துள்ள தம்பதியர்கள் இம்மரத்தை சுற்றி வந்து சுவாமியை வணங்கினால் ஒற்றுமையாக வாழ்வர் என்பது நம்பிக்கை.

பஞ்சபூத தலங்களில் இது நீர் தலம். வசிஷ்டமுனிவர் இங்கு வந்து நதியில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார்.

கரபுரநாதர் திருக்கோயில், உத்தமசோழபுரம்

அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில், உத்தமசோழபுரம், சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கரபுரநாதர்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சோழபுரி, கரபுரம்
ஊர் உத்தமசோழபுரம்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

இராவணன் சகோதரன் கரதூசனன், ஆயிரம் ஆண்டு தவம் செய்து, அக்னிபிரவேசம் செய்யும் நேரத்தில் நில்என்ற அசரீரி வாக்கு கேட்டு நின்றான். இறைவன் கரதூசனனுக்கு காட்சி அளித்தார். அப்போது இறைவனுக்கு கரதூசனன் பூஜை செய்ததால், “கரபுரநாதர்என்ற பெயர் வழங்கப்படுகிறது.
திரேதாயுகத்தில் கரபுரம் என்றும், கலியுகத்தில் சோழபுரி என்றும் கூறப்படும்