Category Archives: கரூர்

அருள்மிகு கதிர்நரசிங்கப் பெருமாள், தேவர்மலை

அருள்மிகு கதிர்நரசிங்கப் பெருமாள், தேவர்மலை, கரூர்

ஒரு காலத்தில் செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர்கள், பிற்காலத்தில் ஊழ்வினை மற்றும் ஒற்றுமை இல்லாமை காரணமாக அனைத்தையும் இழந்து அதிகார உரிமை துறந்து அநாதரவாக நிற்பார்கள்.

பொருளாதாரத்தில் பெருமளவு அவர்கள் நசிந்து போயிருந்தாலும் ஒரு காலத்தில் பெருவாழ்வு வாழ்ந்தவர்கள் என்கிற காரணத்தால் அந்தக் குடும்படத்தின் பெருமையும், புகழும் என்றென்றும் உயர்ந்த மதிப்புடன்தான் இருக்கும். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று கிராமங்களில் ஒரு சில குடும்பத்தினரை அடையாளம் காட்டிப் பேசுவார்கள். அதுபோன்ற குடும்பங்களில் சிலது இருக்கும். சிலது இருக்காது. உதாரணத்துக்கு அவர்களிடம் புகழ் இருக்கும். பொருளாதாரம் இருக்காது. அன்பு இருக்கும், அதிகாரம் இருக்காது. உண்மை இருக்கும், ஊழியர்கள் இருக்கமாட்டார்கள். வரலாறு இருக்கும். வசதிகள் இருக்காது.

கரூர் தேவர்மலை ஸ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள் ஆலயமும் கிட்டத்தட்ட இந்த ரகம் என்றே சொல்லலாம். அதாவது ஒரு காலத்தில் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து அனைத்து உற்சவங்களும் விமரிசையாக நடந்து வீதிகளில் பிரமாண்ட தேர் ஓடி, பக்தி மழையில் திளைத்திருந்த திருக்கோயில்தான் இது. ஆனால் இன்று நிலை வேறு.

பவித்திரம் இருக்கிறது. பக்தர்கள் இல்லை. குறையாத சாந்நித்யம் இருக்கிறது; கோலாகல உற்சவங்கள் இல்லை. ஆன்மிக மனம் அளவில்லாமல் கமழ்கிறது. மணம் வீசும் மடப்பள்ளி இல்லை.

அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், கரூர்

அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், கரூர்,கரூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கல்யாண வெங்கடரமணர்
தாயார் லட்சுமி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் கரூர்
மாவட்டம் கரூர்
மாநிலம் தமிழ்நாடு

மூன்றாம் குலோத்துங்க சோழன் அரசவையில் புலவராக இருந்த டங்கணாச்சாரி என்பவர் தன் மனைவி சுந்தராம்பிகையுடன் வாழ்ந்து வந்தார். அவர் சிவன் மீது அன்பு கொண்டவர். வேறு எந்தக் கடவுளையும் வணங்க மாட்டார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாத சுந்தராம்பிகை திருப்பதி வெங்கடாசலபதியிடம், தனக்கு குழந்தை பிறந்தால் ஐந்து வயதில் திருப்பதிக்கு கூட்டி வந்து மொட்டை போடுவதாக பிரார்த்தித்துக் கொண்டாள். வெங்கடேசனின் அருளால் சுந்தாரம்பிகை கருவுற்றாள். தம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சுந்தராம்பிகை குழந்தைக்காக வெங்கடா சலபதியிடம் வேண்டிக் கொண்டது டங்கணாச்சாரிக்கு தெரியாது. குழந்தையும் பிறந்தது. குழந்தைக்கு குண்டலாச்சாரிஎனப் பெயர் சூட்டினர். ஐந்து வயது ஆனதும் வேண்டிக் கொண்டபடி, நேர்த்திக்கடனை செலுத்தக் கணவரிடம் அனுமதி கேட்டாள் சுந்தராம்பிகை. டங்கணாச்சாரி வெகுண்டார். “இந்த உலகில் சிவனைத் தவிர சக்தியுள்ள கடவுள் வேறு யாருமில்லை. எனக்கு சிவன் அருளால் தான் குழந்தை பிறந்தது. நீ திருப்பதிக்கு செல்லக்கூடாதுஎன்று கட்டளையிட்டார். சுந்தராம்பிகை கலங்கினாள். தவமிருந்து பெற்ற மகனுக்கு, வேண்டுதலை நிறைவேற் றாவிட்டால், ஏதாவது ஆபத்து வருமோ எனக்கலங்கினாள். இந்தக் கவலையில் அவளது உடல்நிலை மோசமானது. இதைச் சிறுவன் கவனித்தான். அம்மாவின் கவலைக்கு காரணம் கேட்டான். அவனுக்கு புரியும்படியாக அம்மா நடந்த விபரத்தைச் சொன்னாள். “இதற்காகவா கவலைப் படுகிறாய். நான் அந்த திருப்பதி வெங்கடாசலப் பெருமாளை இங்கேயே வரவழைக்கிறேன்என்றான். அம்மா சிறுவனின் பேச்சை விளையாட்டாக எடுத்துக்கொண்டாள். சிறுவன் தன் ஊரிலுள்ள தான்தோன்றி மலைக்கு சென்றான். “திருப்பதி வெங்கடாசலபதியே! என் அன்னையின் கவலை தீர்க்க இந்த மலைக்கு வா. என் அம்மாவைக் காப்பாற்று. என் அம்மாவின் உயிர் போனால் நானும் இறந்து விடுவேன்என்று அழுதான். அப்போது ஒரு துறவி அங்கு வந்தார். அவனைத் தேற்றி அழுகைக்கான காரணம் கேட்டார்.