Category Archives: ஈரோடு

அருள்மிகு மலையாள பகவதி அம்மன் திருக்கோயில், கணக்கன்பாளையம்

அருள்மிகு மலையாள பகவதி அம்மன் திருக்கோயில், கணக்கன்பாளையம் – 638452,(கோபிசெட்டிபாளையம்), ஈரோடு மாவட்டம்.
********************************************************************************************

+91-4285-318 271, 94430 08679 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

 

மூலவர்: – மலையாள பகவதி

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – கணக்கன்பாளையம்

மாவட்டம்: – ஈரோடு

மாநிலம்: – தமிழ்நாடு

நூறு ஆண்டுகளுக்கு முன், கர்நாடக மாநிலத்தில் விளையும் மஞ்சளை விற்பதற்க்காக, ஒரு வியாபாரி மஞ்சள் மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றி மலைப்பாதை வழியாக ஓட்டி வந்தார். அப்போது சமநிலையான பாரம் இல்லாததால் மாடு தடுமாறிச் சென்றது. இதனால் அதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் ஏதேனும் பாறாங்கற்களை ஏற்றலாம் என நினைத்து மலைக்காட்டிற்குள் சென்றார் அந்த வியாபாரி.

அங்கு ஒரு கல் மினுமினுப்புடன் தென்பட்டது. அதனை எடுத்து மாட்டு வண்டியின் பொதியினுள் வைக்கப் பாரம் சரியானது. பின்னர் வியாபாரி வண்டியை சிரமமில்லாமல் ஓட்டி வந்தார். கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் மலையடிவாரப் பகுதிக்கு வந்ததும் மாட்டுவண்டி பொதியினுள் இருந்த மினுமினுப்பான கல் கீழே விழுந்துவிட்டது. ஆனால் வண்டியின் பாரத்தில் மாற்றம் எதுவும் தெரியாததால், வியாபாரி கல் கீழே விழுந்ததைக் கவனிக்கவில்லை.

அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோயில், ஈரோடு

அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோயில், ஈரோடு– 638 001, ஈரோடு மாவட்டம்.
*****************************************************************************************

+91-424-221 4421 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கொங்காலம்மன் (கொங்கலாயி)

தல விருட்சம்: – அரசமரம்

தீர்த்தம்: – காவிரி தீர்த்தம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஈரோடு

மாவட்டம்: – ஈரோடு

மாநிலம்: – தமிழ்நாடு

ஈரோட்டில் முதன்மையான கோயிலாக கொங்காலம்மன் கோயில் உள்ளது. இவள் கொங்கு நாட்டின் குல தெய்வம். செல்லமாக கொங் கலாயிஎன்று மக்கள் போற்றி வழிபட்டு வருகின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது.

இந்த கோயிலில் இருந்த கொங்கலம்மனை சிலர் தங்கள் ஊரில் பிரதிட்டை செய்வதற்காக மாட்டு வண்டியில் திருடிச் சென்றனர். வெப்படை ஆனங்கூர் அருகே சென்ற போது, வண்டியின் அச்சு முறிந்தது. இதையடுத்து அம்மனை அங்கேயே விட்டு விட்டு அனைவரும் ஓடிவிட்டனர். ஆனங்கூர் மக்கள் இந்த அம்மன் சிலையை பார்த்து ஆனந்தித்து அங்கேயே பிரதிட்டை செய்து தெய்வமாக வழிபட்டனர்.

இச்சம்பவத்தை கேள்விப்பட்ட ஈரோடு மக்கள் ஆனங்கூர் சென்று கொங்கலம்மனை வழிபட்டனர். இது ஆதி கொங்கலம்மன் என்றழைக்கப்படுகிறது. இந்த அம்மன் 12 கைகளுடன் காட்சி தருகிறார். இந்த கைகளில் சூலம், உடுக்கை, பாம்பு, வேதம், மணி, கபாலம் போன்றவை இடம் பெற்றுள்ளது.

இந்த அம்மன் சிலையை பார்த்த மக்கள் ஈரோட்டில் புதிதாக ஒரு அம்மன் சிலையை பிரதிட்டை செய்து வழிபடத் தொடங்கினர். ஈரோட்டில் பிற கோயில்களில் விழாக்கள் கொண்டாடும் போது காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் முதல் தீர்த்தம் கொங்கலம்மனுக்கு அபிஷேகம் செய்த பின்னர் தான் மற்ற கோயில்களுக்கு கொண்டு செல்வது வழக்கத்தில் உள்ளது.

இக்கோயிலில், கி.பி.13ம் நூற் றாண்டை சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்றும், இரண்டாம் வீரபாண்டியன் காலத்து கல்வெட்டும், 19ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.