Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் கோயில், காஞ்சிபுரம்-631501 காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44-6727 1692 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் முகுந்த நாயகன், அழகிய சிங்கர்
தாயார் வேளுக்கை வல்லி
தீர்த்தம் கனக சரஸ், ஹேமசரஸ்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவேளுக்கை
ஊர் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

திருமாலின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுகிற அவதாரம் நரசிம்ம அவதாரம். பெருமாளின் காக்கும் குணம் உடனே வெளிப்பட்ட அவதாரம். பக்தனின் வார்த்தையை பகவான் உடனே காப்பாற்றிய அவதாரம். “வேள்என்ற சொல்லுக்கு ஆசைஎன்று பொருள். இரணியனை வதம் செய்த பின், பகவான் நரசிம்மர் அமைதியை விரும்பினார். அவர் இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் வேளிருக்கைஎன்றாகி, காலப்போக்கில் வேளுக்கைஎன்றாகி விட்டது.

அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் (அஷ்டபுஜப்பெருமாள்) திருக்கோயில், காஞ்சிபுரம்

அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் (அஷ்டபுஜப்பெருமாள்) திருக்கோயில், காஞ்சிபுரம் – 631501, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91-44-2722 5242 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆதிகேசவப்பெருமாள்
தாயார் அலமேல்மங்கை, பத்மாஸனி
தீர்த்தம் கஜேந்திர புஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் மகாசந்தன் என்னும் யோகிக்கு, இந்த பூவுலக வாழ்க்கையை முடித்து விட்டு இறைவனின் திருவடி சேர விருப்பம் ஏற்பட்டது. இந்திரனுக்கு நிகரான தகுதி பெற்றிருந்த இவர் பெருமாளை நோக்கி நீண்ட காலம் தவமிருந்தார். பயந்து போன இந்திரன், மகாசந்தனின் தவத்தை கலைக்க, தேவலோக கன்னிகளை அனுப்பி வைத்தான். இதற்கெல்லாம் யோகி அசையவில்லை. பின் இந்திரன் ஆண்யானை வடிவமெடுத்து முனிவரின் இருப்பிடம் சேர்ந்தான். இதன் அழகில் மயங்கிய முனிவர் தானும் யானை வடிவெடுத்து யானைகளுடன் கூட்டம் கூட்டமாக காடுகளில் திரியும் போது, சாளக்கிராமத்தில் நீராடியது. அப்போது அந்த யானைக்கு தன் யோக வாழ்க்கை ஞாபகத்திற்கு வந்தது. மிகவும் வருந்திய யானை, பல திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளை வழிபட்டுப் பரிகாரம் தேடியது. மிருகண்டு முனிவர் என்பவர் இதன் நிலை கண்டு வருந்தி,”காஞ்சிக்கு சென்று வரதராஜப்பெருமாளை வழிபட்டால் உனது பிரார்த்தனை நிறைவேறும்என்றார். அதன்படியே இந்த யானையும் பெருமாளை வழிபட்டு வந்தது. ஒரு முறை கோயிலுக்கு செல்லும் வழியில் அஷ்டபுஜப் பெருமாளைத் தரிசிக்கும் வாய்ப்பு இதற்கு கிடைத்தது. இவரது அழகில் மயங்கிய யானை அருகிலிருந்த குளத்திலிருந்து 14,000 மலர்களை பறித்துக் கொடுத்து இறைவனுக்கு சேவை செய்து வந்தது. ஒரு நாள் பூ கிடைக்காமல் போகவே பக்கத்திலிருந்த குளத்திற்குச் சென்று பூ பறித்தது. அப்போது அதிலிருந்த முதலை யானையின் காலை விடாமல் பிடித்து கொண்டது. பயந்து போன யானை அஷ்டபுஜப் பெருமாளை நோக்கி,”ஆதிமூலமேஎன அபயக்குரல் கொடுத்தது. முன்பொரு முறை கஜேந்திரனைக் காப்பாற்றிய ஆதிமூலம் இந்த முறையும் கருட வாகனத்தில் ஏறி வந்து, தனது சக்கரத்தினால் முதலையின் தலையை வெட்டி, யானையைக் காப்பாற்றினார்.