Category Archives: 108 திவ்விய தேசங்கள்

அருள்மிகு புண்டரீகாட்சன் (தாமரைக்கண்ணன்) திருக்கோயில், திருவெள்ளறை

அருள்மிகு புண்டரீகாட்சன் (தாமரைக்கண்ணன்) திருக்கோயில், திருவெள்ளறை-621 009, திருச்சி மாவட்டம்.

+91- 431-256 2243, 93451 18817 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 1.15 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் புண்டரீகாட்சன்
உற்சவர் பங்கயச்செல்வி
தாயார் செண்பகவல்லி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் குச, மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராக, கந்த, பத்ம தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவெள்ளறை
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

ஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருமாள்,”இலட்சுமி, உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டுப் பெறலாம்என்கிறார். அதற்கு இலட்சுமி,”தங்களின் திருமார்பில் நித்யவாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்குஎன்கிறாள். “இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்தப் பாற்கடலில், தேவர்களை காட்டிலும் எனக்குத்தான் அதிக உரிமை வேண்டும்என்கிறாள். அதற்குப் பெருமாள்,”உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான்தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்என்கிறார்.

அருள்மிகு கமலவல்லிநாச்சியார் திருக்கோயில், உறையூர்

அருள்மிகு கமலவல்லிநாச்சியார் திருக்கோயில், உறையூர்-620 003 திருச்சி மாவட்டம்.

+91-431 – 2762 446, 94431 88716 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அழகிய மணவாளர்
தாயார் கமலவல்லி
தீர்த்தம் கமலபுஷ்கரிணி
ஆகமம் பாஞ்சராத்ரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கோழியூர்
ஊர் உறையூர், திருச்சி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

அரங்கநாதரின் பக்தனான நங்கசோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும்படி ரங்கநாதர் அனுப்பினார். ஒருசமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, “கமலவல்லி” (கமலம்தாமரை) என பெயரிட்டு வளர்த்தான். பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, ரங்கநாதர் அவள் முன்பு குதிரையில் சென்றார். அவரைக்கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண்டாள். அவரையே மணப்பதென உறுதி பூண்டாள். நந்தசோழனின் கனவில் தோன்றிய பெருமாள், தான் கமலவல்லியை மணக்கவிருப்பதாகக் கூறினார். எனவே நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச்சென்றார். அங்கு அரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள். பின்பு மன்னன், உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான்.