Category Archives: நவகைலாயங்கள்

கைலாசநாதர் கோயில், ஸ்ரீவைகுண்டம்

அருள்மிகு கைலாசநாதர் கோயில், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மாவட்டம் .

+91- 4630 – 256 492.

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் சிவகாமி
தீர்த்தம் தாமிரபரணி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஸ்ரீவைகுண்டம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

உரோமசர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. இங்கு ஒரு இலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவர் கைலாசநாதர் எனப்பட்டார். சனிபகவானின் அம்சத்துடன் காட்சி தரும் இவர், சிவகாமி அம்பாளுடன் உள்ளார். சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தியை சுற்றிலும் 108 விளக்குகள் உள்ளது. இந்த விளக்குகளை ஏற்றி சுவாமியை வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த இக்கோயிலில், நவ கைலாய தலங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்த உரோமச முனிவர், மற்றும் நடராஜர், அக்னிபத்திரர், வீரபத்திரர் ஆகியோரின் சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும் காட்சி தருகின்றனர். இங்குள்ள கொடிமரம் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். இத்தலத்திலுள்ள நடராஜரை சந்தன சபாபதி என அழைக்கின்றனர்.

கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி, தூத்துக்குடி மாவட்டம்

+91- 99420 62825, 98422 63681

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் சவுந்தர நாயகி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ராஜபதி
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் முக்தியைக் வேண்ட, அகத்திய மாமுனிவரின் அறிவுரைப்படி, ஜீவ நதியான தாமிரபரணியில், ஒன்பது தாமரை மலர்களை விட்டு, அவை கரை ஒதுங்கும் இடத்தில், கைலாசநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, முக்தி பெற்றார். அவ்வாறு ஏற்பட்ட நவ கயிலாய ஸ்தலங்களாவன: