அருள்மிகு நவநீதகிருஷ்ணன் கோயில் , மளூர்

அருள்மிகு நவநீதகிருஷ்ணன் கோயில் , மளூர், கர்நாடகா

கர்நாடகாவில் உள்ள மளூர் நவநீதகிருஷ்ணன் கோயிலில் குழந்தைக்கண்ணன் தவழும் நிலையில் விக்ரகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கையில் வெண்ணையை உருண்டையாக பிடித்து கண்ணன் வைத்துள்ளார். இந்தக்கண்ணனின் பாதங்களில் சங்கு சக்கர ரேகைகள் உள்ளன. கழுத்தில் முத்து மாலையும் புலி நக மாலையும் அசைந்தாடும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இடுப்பில் சலங்கை பட்டை ஒலி கேட்கும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் கருநிற கல்லால் ஆன நகைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற குழந்தைக்கண்ணன் சிற்பத்தை இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *