கொடிய விஷ ஜந்துக்களிடமிருந்து காக்க

கொடிய விஷ ஜந்துக்களிடமிருந்து காக்க

சிலவகைப் பாம்புகள் கடித்தால் அவற்றின் விஷ வேகம் மிகவும் துரிதமாக இரத்தத்தில் கலந்து, இருதயத்தை அடைந்து முச்சடைத்து மனிதன் இறந்துவிடுவான். ஆனால் அவசர உணர்வோடு பேய்ச்சுரையை உபயோகித்தால் விஷத்தை முறித்துவிடலாம். கொடிய விஷப்பாம்பு கடித்து மனிதன் உணர்விழந்துவிட்டான் என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது அவனுக்கு உணர்வு ஊட்டி நினைவுண்டாக்க வேண்டியதுதான். இதற்கு பேய்ச்சுரையின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து சம அளவு தும்பை இலைச்சாறு சேர்த்து மூக்கில் சில துளிகள் விட்டு ஊதிவிட வேண்டும். ஒரு தும்மலோடு விஷக்கடிக்கு ஆளானவருக்கு நினைவு திரும்பிவிடும். நினைவு திரும்பிய மறுகணமே பேய்ச்சுரையின் வேரைச் சேகரித்து நன்கு அரைக்க வேண்டும். இதை விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டிவிட வேண்டும். திடீரென ஏற்படும் பேதி, வாந்தி முதலியவற்றால் விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு விஷக்கடிக்கு ஆளானவரின் உயிர் மீளும். அத்துடன் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும்.

கீழ்கண்ட ஆலயங்களில் உள்ள இறைவனை வேண்டிக்கொள்ள பாம்பு கடிபட்டவர் பிழைத்துக்கொள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

செல்லாண்டியம்மன்

சுண்டக்காமுத்தூர்

கோயம்புத்தூர்

நஞ்சுண்டேஸ்வரர் நஞ்சன்கூடு கர்நாடகா
இரத்தினகிரீஸ்வரர் திருமருகல் நாகப்பட்டினம்

வாழைத்தோட்டத்து அய்யன்

கருத்தம்பட்டி

கோயம்புத்தூர்

நல்லாண்டவர்

மணப்பாறை

திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *