அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி – திருவலிதாயம், சென்னை

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி திருவலிதாயம், சென்னை மாவட்டம்.

+91 – 44 – 2654 0706 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30மணி முதல் 12மணி வரை, மாலை4.30 மணி முதல் 8.30இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார்
அம்மன் ஜெகதாம்பிகை
தல விருட்சம் பாதிரி, கொன்றை
தீர்த்தம் பரத்வாஜ் தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவலிதாயம்
ஊர் பாடி திருவலிதாயம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞான சம்பந்தர்

வியாழபகவானின் மகனான பரத்வாஜர், கரிக்குருவியின்(வலியன்) பிள்ளையாக பிறந்தார். தான் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தமடைந்த பரத்வாஜர், பல புண்ணிய தலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது, கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார். இலிங்கத்திற்குப் பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்து, பறவைகளின் தலைவனாகும்படி அருளினார். எனவேதான், இத்தலம் திருவலிதாயம்என்றும், சிவன் வலியநாதர்என்றும் அழைக்கப்படுகிறார்.

வியாழன், தான் செய்த தவறால், தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிட்டும் என்றார். அதன்படி இங்கு வந்த வியாழன், புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார்.

பிரம்மபுத்திரிகளான கமலி, வல்லி ஆகிய இருவரையும் விநாயகர் இத்தலத்தில் தான் திருமணம் செய்து கொண்டார் என வரலாறு கூறுகிறது. இதற்கு சான்றாக இங்கு கமலை, வல்லிகளுடன் இருக்கும்படியான விநாயகரின் உற்சவர் சிலை உள்ளது. இத்தலம், நடுநாயகமாக இருக்க சுற்றிலும் மாலையிட்டது போல 11 திருத்தலங்கள்அமைந்திருப்பது சிறப்பு. இத்தலத்திற்கு வந்தாலே முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் நீங்கும்; குருபகவானை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் சுவாமியை நோக்கியபடி தனி சன்னதியில் குருபகவான் உள்ளார். சிவலிங்கத்தை வழிபட்ட நிலையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. சிவன், தனக்கு பூஜை பெறுவதை உரிமையாக உடையவர் என்பதால் இவர், “பலிதாயர்என்றும் அழைக்கப்படுகிறார். பலி என்றால் பூஜை, தாயம் என்றால் உரிமை என்று பொருள். விநாயகரின் திருநாமம் வரசித்தி விநாயகர். ராஜகோபுரம் மூன்று நிலை உடையது. மூலவர் சுயம்பு மூர்த்தி. இவருக்கு மேல் உள்ள விமானம் கஜபிருஷ் ட (யானையின் பின்புறம்) அமைப்புடையது.

தேவாரப்பதிகம்:

பத்தரோடு பலரும் பொலியம்மலர் அங்கைப் புனல்தூவி

ஒத்தசொல்லி உகத்தவர்தாம் தொழுது ஏத்த உயர் சென்னி

மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலிதாயம்

சித்தம் வைத்த அடியாரவர் மேலடை யாமற்றிடர் நோயே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 21வது தலம்

திருவிழா:

சித்திரையில் பிரம்மோற்ஸவம், தை கிருத்திகை, குரு பெயர்ச்சி.

பிரார்த்தனை:

சுவாமியை வணங்கிட திருமணத்தடை, நோய்கள் நீங்கும்; தெட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வணங்கிட ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பவுர்ணமியில் சுவாமியை வழிபட்டால் நற்பேறு கிடைக்கும்.

நேர்த்திக்கடன்:

வியாழக்கிழமைகளில் இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் ஆடை அணிவித்து வழிபட்டால் குரு சம்பந்தப்பட்ட தோஷம் விலகும்.

இருப்பிடம் :

சென்னை பாரீஸ், கோயம்பேடு, தாம்பரத்திலிருந்து பாடிக்குபஸ்வசதி உள்ளது. மின்சார ரயிலில் கொரட்டூர் சென்று அங்கிருந்து பஸ்சில் செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *