Tag Archives: நல்லூர்

பஞ்சவர்ணேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்), நல்லூர்

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்), நல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்

காலை 7.30 முதல் 12 மணிவரையிலும் மாலை 5.30 முதல் 8 மணிவரையிலும் இத்தல இறைவனை தரிசிக்கலாம்.

இமயமலையில் உமாதேவியை சிவபெருமான் திருமணம் செய்யும் காட்சியைக் காண உலகத்திலுள்ள அனைத்து சீவராசிகளும் திரண்டு வடக்கே சென்றனர். இதனால் வடதிசை பாரத்தால் தாழ்ந்தது. தென்திசை உயர்ந்தது. உலகைச் சமப்படுத்த அகத்தியரை தென்திசைக்கு செல்லும்படி சிவபெருமான் பணித்தார். தனக்கு திருமண காட்சி காணும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்ற அகத்தியரிடம், ”நான் உனக்கு திருமணகாட்சி அருளுகிறேன்என்றார் சிவன். இதன்படி அந்த காட்சியை இந்த தலத்தில் காட்டி அருளினார். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு இலிங்கத்தை வைத்துப் பூஜித்து பேறுபெற்றார். அன்று அவர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூலலிங்கத்தின் பின்புறம் கருவறையில் காணலாம்.

மாசி மகத்திற்காக கும்பகோண மகாகுளத்தில் நீராடுவதால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நல்லூரில் உள்ள குளத்தில் நீராடினாலும் கிடைக்கும் என்கிறது புராணம். பாண்டவர்களின் தாய் குந்தி தேவி பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றாள் என்பதால் அவளுக்கு தோஷம் தொற்றிக் கொள்கிறது. இந்த தோஷம் நீங்க குந்தி, நாரதரிடம் யோசனை கேட்க, ஏழு கடல்களில் சென்று நீராடினால் தோஷம் நீங்கும் என்கிறார். நான் பெண், என்னால் எப்படி ஏழுகடல்களில் சென்று நீராட முடியும், எனவே வேறு ஏதாவது வழி கூற வேண்டும் என்கிறாள் குந்தி.

அருள்மிகு சுந்தரவரதராஜப்பெருமாள் கோயில், நல்லூர்

அருள்மிகு சுந்தரவரதராஜப்பெருமாள் கோயில், நல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்

திறக்கும் நேரம்: காலை 8 – 12மணி, மாலை 4 – 8 மணி.

முன்னொரு காலத்தில் தலயாத்திரை சென்ற அந்தணர்கள் சிலர் இங்கு தங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெருமாள் சிலையை வைத்து பூஜை செய்தனர். மறுநாள் அவர்கள் கிளம்பியபோது, இவ்விடத்தில் இருந்து சிலையை எடுக்க முடியவில்லை. அப்போது மகாவிஷ்ணு காட்சிகொடுத்து, தான் இத்தலத்தில் தங்க விரும்புவதாகக் கூறினார். அந்தணர்கள் மகிழ்ச்சியுடன், இங்கு கோயில் எழுப்பினர். நாளடைவில் இந்தக் கோயில் பாழடையவே, பிற்காலத்தில் புதிய கோயில் கட்டப்பட்டது. சுவாமி காண்போரை வசீகரிக்கும் அழகுடன் காட்சியளிப்பதால், “சுந்தர வரதராஜர்என்று அழைக்கப்படுகிறார்.

பெருமாள் எதிரே, கருடாழ்வார் வணங்கியபடிதான் பார்த்திருப்பீர்கள். அரிதாக, ஸ்ரீவில்லிப்புத்தூர் போன்ற ஒரு சில தலங்களில் சுவாமியின் அருகில் அவர் இருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகிலுள்ள நல்லூர் சுந்தரவரதராஜப்பெருமாள் கோயிலில் கருடாழ்வார், பெருமாளின் திருவடியின் கீழ் அமர்ந்து, வணங்கிய கோலத்தில் உள்ளார்.