Tag Archives: சீர்காழி

விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம் .

+91- 44 – 2432 1793

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் சீர்காழி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும், அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர். பூலோகம், பாதாள லோகத்தை கைப்பற்றிய அவர்கள், இந்திரலோகத்தையும் கைப்பற்றி அங்கும் ஆட்சியமைத்தார்கள். தேவர்களின் தலைவன் இந்திரன், இந்திராணியுடன் பூலோகம் வந்து சீர்காழி என்ற புண்ணிய தலத்தில் உள்ள மூங்கில் காட்டில் தங்கி, மூங்கிலாக வடிவெடுத்து சிவபெருமானை வழிபட்டு வந்தான். இந்திர லோகத்தை மீட்டுத் தரும்படி சிவபெருமானை பகல் வேளையில் வழிபட்டனர். இரவில் யார்கண்ணிலும் படாதபடி கைவிடேலப்பரின் கையில் உள்ள தாமரை பூவிதழ்களின் நடுவே தங்கி, தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். இவர்களது கடும் தவத்திற்கு மகிழ்ந்த சிவன், சிவலோகம் வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கக் கூறினார். இந்திரன், இந்திராணியை கைவிடேலப்பரிடம் ஒப்படைத்து விட்டு சிவலோகம் சென்றான். ஆனால் கைவிடேலப்பரோ, தனது காவல் கணக்குகளை சிவனிடம் ஒப்படைப்பதற்காக சிவலோகம் வந்தடைந்தார். அப்படி வரும்முன் இந்திராணியை, தனது தளபதியிடம் ஒப்படைத்தார். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூரபத்மனின் தங்கை அஜமுகி அழகே உருவான இந்திராணியை, தன் அண்ணனுக்கு மணமுடிக்க எண்ணி, அவளைக் கவர்ந்து செல்ல முயன்றாள். மகாகாளனோ அஜமுகியிடம் சண்டையிட்டு அவளது கரத்தை வீழ்த்தி இந்திராணியை மீட்டார். அந்த அரக்கியின் கை விழுந்த காடு தான் கைவிழுந்த சேரி.” அது தற்பொழுது,”கைவிலாஞ்சேரிஎன அழைக்கப்படுகிறது. சாஸ்தா தனக்கு அளித்த பொறுப்பை ஏற்று இந்திராணியை காப்பாற்றி பேரருள் புரிந்தார். இந்த நிகழ்ச்சி நடந்த இடமாகிய சீர்காழி தென்பாதியில் சாஸ்தாவின் கோயில் உள்ளது.

அருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில், காழிச்சீராம விண்ணகரம், சீர்காழி

அருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில், காழிச்சீராம விண்ணகரம், சீர்காழி – 609 110. நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 270 207, 94424 – 19989 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திரிவிக்கிரம நாராயணர்
உற்சவர் தாடாளன்
தாயார் லோகநாயகி
தல விருட்சம் பலா
தீர்த்தம் சங்கு, சக்கர தீர்த்தம்
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பாடலிகவனம்
ஊர் சீர்காழி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

படைக்கும் கடவுளான பிரம்மா பல யுகங்கள் வாழும்படி சாகாவரம் பெற்றிருந்தார். இதனால் அவர் மனதில் கர்வம் உண்டாகவே, தனது பணியை அவர் சரியாகச் செய்யவில்லை. விஷ்ணு அவரது கர்வத்தை அடக்க எண்ணம் கொண்டார். இதனிடையே, மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து திரிவிக்கிரமனாக காலைத்தூக்கி மூவுலகத்தையும் அளந்து காட்டிய கோலத்தைக் காண வேண்டும் என உரோமச முனிவருக்கு ஆசை எழுந்தது. சுவாமியை வேண்டி இத்தலத்தில் தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த மகாவிஷ்ணு, தன் இடக் காலை தூக்கி திரிவிக்கிரம அவதாரத்தை காட்டியருளினார். பின் அவர் உரோமசரிடம், “என் ஏகாந்த நிலையைத் தரிசித்த நீங்கள் பெறுவதற்கு அரிய பல பேறுகளைப் பெற்று சிறப்பான நிலையை பெறுவீர்கள். மேலும், பிரம்மனை விட கூடுதலான ஆயுட்காலமும் பெற்று வாழ்வீர். உமது உடலில் இருக்கும் ஒரு முடி உதிர்ந்தால் பிரம்மாவின் ஆயுட்காலத்தில் ஒரு வருடம் முடியும்என்று கூறி இத்தலத்தில் திரிவிக்கிரமனாக எழுந்தருளினார். மகாவிஷ்ணு சூட்சுமமாக தன் ஆயுளைக் குறைத்ததை அறிந்த பிரம்மா தன் கர்வம் அழியப்பெற்றார்.