Tag Archives: இராமேஸ்வரம்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், ராமேஸ்வரம்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், ராமேஸ்வரம் – 623 526. ராமநாதபுரம் மாவட்டம்.

+91-4573 – 221 223, 97912 45363 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 – மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோதண்டராமர்
உற்சவர் ராமர்
தீர்த்தம் ரத்னாகர தீர்த்தம்
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கோதண்டம்
ஊர் ராமேஸ்வரம்
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

விபீஷணன் தன் சகோதரன் இராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை இராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். இராவணன் அவனது கருத்தை ஏற்க மறுத்ததோடு, காலால் எட்டி உதைக்கச் சென்றான். எனவே, விபீஷணன் இராவணனைப் பிரிந்து இராமபிரானிடம் வந்தான். இராமபிரான் இராமேஸ்வரத்தில் தங்கியிருந்ததை அறிந்த அவன் அவரைச் சந்தித்து ஆசிபெற்றான். அவனது நற்குணத்தை அறிந்த ராமன், அவனைத் தனது சகோதரனாக ஏற்றுக்கொண்டார். மேலும், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே முறைப்படி விபீஷணனுக்கு இலங்கை வேந்தனாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வு இத்தலத்தில் நிகழ்ந்ததாக ஐதீகம். இதனடிப்படையில் இங்கு ராமருக்கு கோயில் எழுப்பப்பட்டது. கோதண்டராமர் என்ற திருநாமம் அவருக்குச் சூட்டப்பட்டது.

அருள்மிகு அபய ஆஞ்சநேயர் (வாலறுந்த ஆஞ்சநேயர்) திருக்கோயில், ராமேஸ்வரம்

அருள்மிகு அபய ஆஞ்சநேயர் (வாலறுந்த ஆஞ்சநேயர்) திருக்கோயில், ராமேஸ்வரம் – 623 526. ராமநாதபுரம் மாவட்டம்.

+91- 4573 – 221 093, 94432 05289 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

மூலவர் அபய ஆஞ்சநேயர்
தல விருட்சம் அத்திமரம்
தீர்த்தம் அனுமன் தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் இராமேஸ்வரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

இலங்கை சென்று இராவணனை வென்று, சீதையை மீட்டு வந்த இராமருக்குத் தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பூஜை செய்ய எண்ணினார். அவரது பூஜைக்காக இலிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயர், கைலாயம் சென்றார். அவ்வேளையில் சீதாதேவி, மணலில் ஒரு இலிங்கம் பிடித்து வைத்தாள். ஆஞ்சநேயர் வரத் தாமதமாகவே, இராமர் மணல் இலிங்கத்தைப் பூஜை செய்து வழிபட்டார். அதன்பின்பு வந்த ஆஞ்சநேயர், நடந்ததையறிந்து கோபம் கொண்டார். வாலால் இலிங்கத்தை சுற்றி மணல் லிங்கத்தை பெயர்க்க முயன்றார். ஆனால் வால் அறுந்ததே தவிர, இலிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை. தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், செய்த குற்றம் நீங்க தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டார். இந்த ஆஞ்சநேயர், இத்தலத்தில் வாலறுந்த கோலத்தில் மூலவராக காட்சி தருகிறார்.