Category Archives: விழுப்புரம்

பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம்

அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம், முண்டியம்பாக்கம், விழுப்புரம் மாவட்டம்.

+91-99420 56781

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பனங்காட்டீஸ்வரர்
அம்மன் சத்யாம்பிகை, புறவம்மை
தல விருட்சம் பனைமரம்
தீர்த்தம் பத்ம தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்புறவார் பனங் காட்டூர்
ஊர் பனையபுரம்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

சிவபெருமானை நிந்தித்து, தக்கன் செயத வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று, தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தான்.

தான் செய்த தவறுக்கு வருந்தி சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றார். சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூரும் ஒன்றாகும்.

சிபிச்சக்ரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காத்தற்காகத் தன் கண்களைப் பறித்தளிக்க, இறைவன் அம்மன்னனின் கடமை உணர்வை அறிந்து காட்சிதந்து இழந்த கண்களை மீண்டும் அருளினார். அதனால் இத்தலத்து இறைவனுக்கு கண்பறித்து அருளிய கடவுள்எனப் பெயர் ஏற்பட்டது.

வெளிப்பிரகாரத்தில் விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் தலமரமாகிய பனைமரங்கள் மூன்று உள்ளன. அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. நின்ற திருக்கோலம்.

சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம் (திருமுண்டீச்சரம்)

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம் (திருமுண்டீச்சரம்), உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம்.

+91- 4146-206 700

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சிவலோக நாதர், முண்டீச்சுரர், முடீசுவரர்
அம்மன் சவுந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வாம்பிகை
தல விருட்சம் வன்னிமரம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் முண்டீச்சரம், திருக்கண்டீச்சரம்
ஊர் கிராமம்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

சிவனின் வாயில்காவலர்களான திண்டி, முண்டி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர். முண்டி வழிபட்டதால் இத்தலம் முண்டீச்சரம்எனப்பட்டது. “முடீச்சரம்என்பதே இத்தலத்தின் புராணப்பெயராக இருந்துள்ளது. இதுவே காலப்போக்கில் திருமுண்டீச்சரம்ஆனது என்பர்.

துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்ற மன்னன் வேட்டைக்கு வந்த போது இப்பகுதில் இருந்த குளத்தில் அதிசயமான தாமரை மலரைக்கண்டான். தன் சேவகர்களை அனுப்பி அந்த மலரை பறித்துவரக் கட்டளையிட்டான். அவர்களால் அந்த மலரைப் பறிக்க முடியவில்லை. மலர் குளத்தை சுற்றிவர ஆரம்பித்தது. எனவே மன்னனே நேரில் சென்று அந்த மலர் மீது அம்புவிட, குளம் முழுவதும் செந்நிறமாக மாறியது. இதைக்கண்ட மன்னன் மயங்கி விழுந்தான். அந்த மலரின் நடுவில் இலிங்கம் இருப்பதைக்கண்டு, குளத்தின் கரையிலேயே கோயில் கட்டி இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தான். இலிங்கத்தின் மீது மன்னன் விட்ட அம்பின் அடையாளம் இன்றும் உள்ளது. இதனால் இறைவன் முடீஸ்வரர்எனப்படுகிறார். இப்பெயரே கல்வெட்டில் மவுலி கிராமம்என அழைக்கப்படுகிறது. மவுலி என்றால் முடிஅல்லது கிரீடம் என்று பொருள். காலப்போக்கில் மக்கள் மவுலியை விட்டு கிராமம் என அழைக்கத்தொடங்கினார்கள்.