Category Archives: நாமக்கல்

எயிலிநாதர் திருக்கோயில், நன்செய் இடையாறு, பரமத்திவேலூர்

அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில், நன்செய் இடையாறு, பரமத்திவேலூர், நாமக்கல் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் எயிலிநாதர் (திருவேலிநாதர்)
அம்மன் சுந்தரவல்லி
தல விருட்சம் வன்னிமரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் நன்செய் இடையாறு, பரமத்திவேலூர்
மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு

பஞ்ச பாண்டவர்களில் பலசாலியான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் நன்செய் இடையாறில் உள்ளது. பீமன் மிகவும் பலம் மிக்கவன் என கருதிக்கொண்டிருந்தான். தன்னைவிட இந்த உலகில் வலியவர் யாருமில்லை என ஆணவம் மிகுந்து சொல்லித் திரிந்தான். அவன் நல்லவன் ஆயினும் இந்த ஆணவம் அவனது புகழை குறைத்தது. அவனுக்கு புத்தி புகட்ட திருமால் செய்த ஏற்பாட்டின்படி சிவபெருமான் மனித உடலும், மிருக தலையும் கொண்ட மிருகம் ஒன்றை ஏவினார். அந்த மிருகத்தின் சக்தியின் முன் பீமனால் நிற்க முடியவில்லை. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, “கோவிந்தா, கோபாலாஎன கதறிக்கொண்டே ஓடினான்.

அசலதீபேஸ்வரர் திருக்கோயில், மோகனூர்

அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில், மோகனூர், நாமக்கல்மாவட்டம்.

+91- 4286 – 257 018, 94433 57139

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அசலதீபேஸ்வரர், குமரீஸ்வரர்
உற்சவர் சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்
அம்மன் மதுகரவேணியம்பிகை, குமராயி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் காவிரி
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மகனூர்
ஊர் மோகனூர்
மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு

கைலாயத்தில் நாரதர் கொடுத்த கனியை சிவன், விநாயகரிடம் கொடுத்ததால் கோபம் கொண்ட முருகன், தென்திசை நோக்கி கிளம்பினார். சிவனும், அம்பிகையும் சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. அம்பிகை அவரை பின்தொடர்ந்தாள். சிவனும் உடன் வந்தார். மயில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த முருகனை அம்பிகை நிற்கும்படி கூறினாள். தாயின் சொற்கேட்ட மகன் நின்றார். அம்பிகை அவரை கைலாயத்திற்கு திரும்பும்படி அழைத்தாள். ஆனால் முருகன், தான் தனியே இருக்க விரும்புவதாக கூறி, பழநிக்குச் சென்றார். இவ்வாறு முருகனை அம்பிகை அழைக்க அவர் வழியில் நின்ற தலம் இது. இவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். இவரே இத்தலத்தில் அசலதீபேஸ்வரராக காட்சி தருகிறார்.