Category Archives: சிவகங்கை

ஆட்கொண்டநாதர் திருக்கோயில், இரணியூர்

அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில், இரணியூர், சிவகங்கை மாவட்டம்.

+91- 4577 – 265 645, 98424 80309

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆட்கொண்டநாதர்
அம்மன் சிவபுரந்தேவி
தல விருட்சம் வில்வம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் இரணியூர்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரனான இரண்யனை சம்காரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க சிவனை வழிபட்டார். சிவன், அவருக்கு காட்சி தந்து தோஷம் நீக்கினார்.

திருமாலின் வேண்டுதலுக்காக சிவன், இத்தலத்தில் ஆட்கொண்டநாதர்என்ற பெயரில் எழுந்தருளினார். நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் இவருக்கு, “நரசிம்மேஸ்வரர்என்றும் பெயருண்டு.

அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர்

அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர் – 630 211, சிவகங்கை மாவட்டம்.

+91- 4577 – 261 122, 94862 – 32362 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சவுமியநாராயணர்
தாயார் திருமாமகள்
தீர்த்தம் தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கோட்டியூர்
ஊர் திருக்கோஷ்டியூர்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். இரணியன் பிரம்மாவிடம், தன்னை தெய்வங்களோ, தேவர்களோ, மனிதர்களோ, மிருகங்களோ அழிக்க இயலாத அளவுக்கு வரம் பெற்றிருந்தான்.

எனவே, ஒரு வித்தியாசமான உருவத்தை எடுக்க வேண்டியது பற்றி தீவிரமாக ஆலோசிக்க வேண்டியிருந்தது. ஆனாலும் பயந்த முனிவர்கள், இரண்யனின் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார்.