Category Archives: கடலூர்

நடராஜர் கோயில், நெய்வேலி

அருள்மிகு நடராஜர் கோயில், நெய்வேலி, கடலூர் மாவட்டம்.

+91-4144-223 500, 94438 43912, 94423 88832

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நடராஜர் (அழகிய திருச்சிற்றம்பலமுடையான்)
அம்மன் சிவகாமி(ஓசை கொடுத்த நாயகி)
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் நெய்வேலி டவுன்ஷிப்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தை சிதம்பரம் கோயிலில் சிவபெருமான் எழுதி,”மாணிக்கவாசகன் சொல்லச்சொல்ல திருவாசகம் எழுதியது திருச்சிற்றம் பலமுடையான்எனக் கையெழுத்திட்டு நடராஜர் சன்னதியில் வைத்தார். இதன் அடிப்படையில் இத்தலத்து நடராஜருக்கு, “அழகிய திருச்சிற்றம்பலமுடையான்என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடராஜர் இடதுகாலை தூக்கி ஆட, அருகே அவரது நடனத்திற்கேற்ப கையில் தாளத்துடன் அன்னை சிவகாமி ஓசை கொடுத்த நாயகிஎன்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில், ஒரத்தூர்

அருள்மிகு மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில், ஒரத்தூர், கடலூர் மாவட்டம்.

+91 505 33249, 96002 05958

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மார்க்கசகாயேஸ்வரர், வழித்துணைநாதர்
அம்மன் மரகதவல்லி
தீர்த்தம் வெள்ளாறு
ஆகமம் சிவாகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் ஒரத்தூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

திருத்தல யாத்திரை சென்ற சுந்தரர், விருத்தாச்சலம் சென்றார். அவர் இத்தலத்தைக் கடந்தபோது வழி தெரியவில்லை. எனவே, ஓரிடத்தில் அப்படியே நின்று விட்டார். தனக்கு வழி காட்டும்படி சிவனை வேண்டினார். அப்போது, அவர் முன் வந்த முதியவர் ஒருவர், “அடியவரே, காட்டுப்பாதையில் பாதியிலேயே நின்று விட்டீரே. எங்கு போகவேண்டும்?” என விசாரித்தார். அவர் தனக்கு பாதை தெரியாததைச் சொன்னார். முதியவர் அவரிடம் தான் வழி காட்டுவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார். கூடலையாற்றூர் தலம் வரையில் அவருடன் சென்று, அங்கிருந்து வழியைக் காட்டினார். சுந்தரர் அவருக்கு நன்றி சொல்ல முயன்றபோது