Tag Archives: மகாபலிபுரம்

அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம்

அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44-2744 3245 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

mpuram-moolavar_mahabalipuram_temple

மூலவர் ஸ்தலசயனப்பெருமாள்
உற்சவர் உலகுய்ய நின்றான்
தாயார் நிலமங்கைத் தாயார்
தல விருட்சம் புன்னை மரம்
தீர்த்தம் புண்டரீக புஷ்கரணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கடல் மல்லை
ஊர் மகாபலிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

இன்றைய மாமல்லபுரம் கடற்கரைப்பகுதியில் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகள் இருந்தன. இதில் புண்டரீக மகரிஷி என்பவர் தவம் செய்து வந்தார். இவர் அருகிலுள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களைப் பறித்து திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனின் திருவடிகளில் சமர்ப்பிக்க நினைத்தார். பறித்த பூக்களைக் கூடையில் கொண்டு செல்லும் போது, குறுக்கே கடல் இருந்தது. பக்திபெருக்கால் கடலில் வழி ஏற்படுத்த, தன் கைகளால் கடல் நீரை இரவு பகலாக வெளியே இறைக்க ஆரம்பித்தார்.

அகிலவல்லி உடனுறை ஆதிவராகப் பெருமாள் கோயில், திருவிடந்தை

அகிலவல்லி உடனுறை ஆதிவராகப் பெருமாள் கோயில், திருவிடந்தை(திரு விடவெந்தை), மகாபலிபுரம்

 

வராகப்பெருமாள் காலவ முனிவரின் 365 மகள்களையும் தினம் ஒரு கன்னியாக மணந்தருள்புரிந்தார். அதனால் இவருக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்ற பெயர் நிலைத்துவிட்டது.

இப்பெருமாள், சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் பாதையில் கோவளத்தையடுத்து 2 கி.மீ. தொலைவில் அகிலவல்லி உடனுறை ஆதிவராகப் பெருமாளாக கோயில் கொண்டு காட்சியளிக்கிறார்.

இத்தலத்தில், மூலவரான ஆதி வராகர், தமது இடது தொடையில் மகாலக்குமியை இருத்தி, அணைத்தபடி காட்சியளிப்பதால், இத்தலத்திற்குத் திரு விடவெந்தை என்ற பெயர் ஏற்பட்டு பிறகு மருவி திருவிடந்தையானது.

திருவாகிய இலக்குமியை இடபாகத்தில் இருத்தியுள்ள எந்தை என்பதே, திருவிட வெந்தை என்ற திருநாமத்தின் பொருள். இதே ஆதிபிரான் தனது வலது பாகத்தில் இலக்குமியை அமர்த்தி, அணைத்தவாறு காட்சியளிக்கும் தலம், இத்தலத்திற்கு அருகிலேயே இருப்பது, பலருக்கும் தெரிந்திராது. அவர்தான் திருவலவெந்தை ஆதிபிரான்.

மகாபலிபுரம் பழைய கலங்கரை விளக்கம் பகுதியில் கோயில் கொண்டுள்ளார் திருவலவெந்தை ஆதிபிரான்.