Tag Archives: கன்னியாகுமரி

அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி

அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி – 629702. கன்னியாகுமரி மாவட்டம்.

+91- 4652 – 246223

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – தேவிகன்னியாகுமரி, பகவதி அம்மன்

உற்சவர்: – தியாகசௌந்தரி, பால சௌந்தரி தீர்த்தம்: – பாபநாசதீர்த்தம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – குமரிக்கண்டம்

ஊர்: – கன்னியாகுமரி

மாவட்டம்: – கன்னியாகுமரி

மாநிலம்: – தமிழ்நாடு

முன்னொரு காலத்தில், தேவர்களை அசுரர்கள் அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூககியது. தீமையும், பாவமும் பெருகின அறியாமையும் அநீதியும் ஆட்சி புரிந்தன. அசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான். தேவர்களோடு அன்றி முனிவருக்கும் ஆன்றோருக்கும் தொல்லை கொடுத்து வந்தான். நிலமகளாகிய தாய், உலகை இருள் மயமாக்கும் தீய திறனை ஒழிப்பதற்குத் திருமாலை வேண்டி நின்றாள்.