Tag Archives: கெங்கமுத்தூர்

அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில், கெங்கமுத்தூர்

அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில், கெங்கமுத்தூர், பாலமேடு, மதுரை மாவட்டம்.
***********************************************************************************************

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த நாகம்மனை தரிசிக்க செல்லலாம்.

மூலவர்: – நாகம்மாள்

தல விருட்சம்: – வேம்பு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – பாலமேடு, கெங்கமுத்தூர்

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் அம்மன், பசுமையான தென்னஞ்சோலைக் குள்ளே புற்றாக வளர்ந்து காட்சி அளித்து வந்தாள்.

நாளடைவில் தாய் கருமாரி, வேம்பு மரத்தடியில் சக்தியாக உருமாறி நின்றாள் இந்த சக்திசொரூபம் தான் ஒருமுறை ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு நாக அம்மனாக மாறினாள்.

வெள்ளத்தில் வலம் வந்த நாகம்மாள், இந்த இடத்தைத்தான் தனக்குரிய இடமாக தேர்ந்தெடுத்தாள். அத்துடன் மக்களுக்கு அருள் வழங்கும் வகையில் கருமாரியையும், பெரிய நாகம்மானையும், ராக்காயியையும் தன்னுடன் இணைத்து ஒன்று சேர்ந்து ஒங்கார சொரூபமான நாகம்மாள்என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.

பார்வதியின் 108 அவதாரத்தில் ஒன்றுதான் இந்த நாகம்மாள் அவதாரம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத்தான், அன்னை பராசக்தி, நாகம்மாள் அவதாரம் எடுத்துள்ளாள் என்கிறது புராணம்.