Category Archives: அநுமன்

அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், வண்டியூர்

அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், வண்டியூர், மதுரை, மதுரை மாவட்டம்.

+91 452 262 3060 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் அதிகாலையிலேயே நடை திறந்திருக்கும்.

மூலவர் வீர ஆஞ்சநேயர்
தீர்த்தம் அழகர் கோயில் தீர்த்தம்
ஆகமம் பாஞ்சராத்ரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வண்டியூர்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்கள் மதுரையில் தமக்கென கோயில் அமைக்க முடிவு செய்து, வைகைக் கரையில் இக்கோயிலை அமைத்ததாகவும், இதற்கென அவர்கள் தனியே ஆஞ்சநேயர் விக்ரகத்தினை ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து இங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத்தொடங்கியதாகவும் செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.

வைகை நதிக்கறையில் தென் திசை நோக்கி அமைந்துள்ள இத்தலம் வைகை ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படினும் கூட இக்கோயிலின் வாசலுக்கு முன்பாக மட்டுமே தண்ணீர் தொட்டுச் செல்லும் என்பது பெருமையாகக் குறிப்பிடத்தக்க செய்தியாகக் கூறப்படுகிறது.

இத்தலத்துடன் இணைந்து சிவன், விநாயகர், நாகர் மற்றும் பாண்டி முனிசாமிகளுக்கு தனிச்சந்நிதிகள் உள்ளது. இங்கு நைவேத்தியமாக தயிர் சாதம் படைக்கப்படுகிறது. இத்தலத்தில் ஆஞ்சநேயர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், சண்முகபுரம்

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், சண்முகபுரம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4259 – 229 054(மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரஆஞ்சநேயர்
தீர்த்தம் பாலாறு
ஆகமம் பாஞ்சராத்ரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சண்முகபுரம்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

இராமரின் மனைவி சீதையை இராவணன் இலங்கைக்கு கடத்திச்சென்ற போது, அவரது சீடரான ஆஞ்சநேயர் சீதையைச் சந்திக்க இலங்கைக்கு சென்றார். இலங்கையில் சீதாதேவியை சந்தித்த ஆஞ்சநேயர் தற்போது கோயில் அமைந்துள்ள பாலாற்றின் வழியாகத் திரும்பினார். அவர் பறந்து சென்ற வழியின் கீழே பாலாற்றங்கரையில் உள்ள பாறையில் தங்கி ஓய்வெடுத்த பாறையில் சுயம்புவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பிற்காலத்தில், இப்பகுதியை சோழமன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் ஆற்றின் நடுவே ஆஞ்சநேயர் சுயம்புவாக இருந்தது கண்டறியப்பட்டு தொடக்கத்தில் சிறிய அளவில் கோயில் எழுப்பி வழிபாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக செவிவழிச்செய்தி கூறுகிறது.