Category Archives: பஞ்சபூதத் தலங்கள்

அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், ஆப்புடையார் கோயில், செல்லூர்

அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், ஆப்புடையார் கோயில், செல்லூர், மதுரை மாவட்டம்.

+91 452 253 0173, 94436 76174 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆப்புடையார், இடபுரேசர் (ரிஷபுரேசர்), அன்னவிநோதன், ஆப்பனூர் நாதர்
அம்மன் சுகந்த குந்தளாம்பிகை, குரவங்கழ் குழலி
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் வைகை, இடபதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவாப்பனூர், திருஆப்புடையார் கோவில்
ஊர் செல்லூர், மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

சோழாந்தகன் என்ற மன்னன் ஒரு சிவபக்தன். இவனது ஆட்சியில் காலம் தவறாமல் மழை பொழிந்து, விளைச்சல் பெருகி மக்கள் இன்பமாக வாழ்ந்தனர். இதற்கு காரணம் இவனது சிறந்த சிவபக்தி தான். இவன் எப்போதும் சிவபூஜை செய்த பின்பு தான் சாப்பிடுவான். ஒரு முறை இவன் வேட்டையாடக் காட்டிற்கு சென்றான். அப்போது ஒர் அழகிய மானைப்பார்த்தான். விரட்டினான். ஆனால் இவனது பிடியில் சிக்கவில்லை. மானை விரட்டிய களைப்பால் மயங்கிய மன்னன் நடுக்காட்டில் விழுந்து விட்டான். பயந்து போன இவனது பாதுகாப்பு வீரர்கள், மன்னனின் களைப்பு தீர உணவை அருந்தக் கூறினர். ஆனால் சிவபூஜை செய்யாமல் சாப்பிடமாட்டேன் என்பதை உறுதியாகத் தெரிவித்தான். புத்திசாலி அமைச்சர் ஒருத்தர், அந்த காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஆப்பு அடித்தார். அதைக்காட்டி, “மன்னா, இங்கே ஒரு சுயம்பு இலிங்கம் உள்ளது. நீங்கள் அதை பூஜை செய்த பின் உணவருந்தலாமேஎன்று யோசனை கூறினார். களைப்பிலிருந்த மன்னனும் அந்த ஆப்பை சுயம்புலிங்கம் என நினைத்து வணங்கி உணவருந்தி விட்டான். களைப்பு நீங்கிய பிறகுதான், தாம் வணங்கியது இலிங்கம் அல்ல அது ஒர் ஆப்பு என்பதை உணர்ந்து மிக வருந்தினான்.

அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்

அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர், திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 242 343, +91- 94433 54302 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தியாகராஜர், வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்
அம்மன் கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள்
தல விருட்சம் பாதிரிமரம்
தீர்த்தம் கமலாலயம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவாரூர்
ஊர் திருவாரூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்

ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும்?” எனக் கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க இலிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த இலிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 இலிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான். முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ இலிங்கத்துடன், மயன் செய்த இலிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ இலிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற இலிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன.