Tag Archives: காரிசேரி

அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில், காரிசேரி

அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில், காரிசேரி– 626 119 விருதுநகர் மாவட்டம்.

+91- 98423 – 64059 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமை காலை 8 – மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் லட்சுமி நாராயணர்
தாயார் லட்சுமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் காரிசேரி
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் வத்திராயிருப்பு அருகிலுள்ள சதுரகிரி மலை மகாலிங்க சுவாமி கோயிலில் வசித்த சில சித்தர்கள் நவபாஷாணத்தில் ஒரு லட்சுமி நாராயணர் சிலை செய்து வழிபட்டு வந்தனர். ஒருசமயம் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, சிலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, காரிசேரியில் கரை ஒதுங்கியது. சிலையை எடுத்த மக்கள், இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.