Tag Archives: தென் திருமுல்லைவாசல்

அருள்மிகு முல்லைவன நாதர் உடனுறை அணிகொண்ட கோதையம்மை திருக்கோயில், திருமுல்லைவாசல்

அருள்மிகு முல்லைவன நாதர் உடனுறை அணிகொண்ட கோதையம்மை திருக்கோயில், திருமுல்லைவாசல், நகாப்பட்டினம் மாவட்டம்.

+91-94865 24626 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் முல்லைவனநாதர், மாசிலாமணீசர் (யூதிகா பரமேஸ்வரர்)
அம்மன் அணிகொண்ட கோதையம்மை, (சத்தியானந்த சவுந்தரி)
தல விருட்சம் முல்லை
தீர்த்தம் பிரம்ம, சந்திர தீர்த்தங்கள்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தென்திருமுல்லைவாயில்
ஊர் திருமுல்லைவாசல்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

கரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளி வளவன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீரவேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூறினர். நோய் தீர, தன் பரிவாரங்களுடன் இத்தலத்தின் அருகில் உள்ள கடலில் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லைக் கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லைக் கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை.

முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு இரத்தம் பெருகியது. அதிர்ச்சியடைந்த கிள்ளிவளவன், ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே எனப் பார்க்க, அங்கே இலிங்கம் ஒன்று இரத்தம் வழியக் காட்சியளித்தது. தெரியாமல் மாபெரும் தவறு செய்து விட்டோமே என வருந்திய வளவன், தன்னைத்தானே வெட்ட முற்பட்டான். உடனே ஈசன் பார்வதியுடன் ரிஷபாரூடராக காட்சி தந்து கிள்ளிவளவனைக் காப்பாற்றினார். எனவே தான் இத்தலத்திற்கு திருமுல்லை வாசல்என்று பெயர் வந்தது. இலிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.