Tag Archives: பரமக்குடி

எமனேஸ்வரமுடையார் திருக்கோயில், எமனேஸ்வரம் – பரமக்குடி

அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில், எமனேஸ்வரம்பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்.

+91- 94860 13533

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் எமனேஸ்வரமுடையார்
உற்சவர் பிரதோஷநாயனார்
அம்மன் சொர்ணகுஜாம்பிகை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் எமதீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் எமனேஸ்வரம்
ஊர் பரமக்குடி
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

சிவபக்தனான மார்க்கண்டேயர், அற்ப ஆயுளில் உயிர் பிரியும்படியான வரம் பெற்றிருந்தார். அவரது இறுதிக்காலத்தில் எமதர்மன், அவரது உயிரை எடுக்க வந்தார். அப்போது மார்க்கண்டேயர், சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார்.

திருக்கடையூர் தலத்திற்கு அவர் சென்றபோது, எமன் பாசக்கயிறை வீசினான். அவ்வேளையில் அவர், சிவபெருமானை தழுவிக்கொள்ளவே பாசக்கயிறு லிங்கத்தின் மீது விழுந்தது. பணியை சரியாக செய்யாத எமதர்மனை, சிவபெருமான் இடது காலால் எட்டி உதைத்தார்.

அருள்மிகு முத்தால பரமேசுவரியம்மன் திருக்கோயில், பரமக்குடி

அருள்மிகு முத்தால பரமேசுவரியம்மன் திருக்கோயில், பரமக்குடி – 623 707. ராமநாதபுரம் மாவட்டம்.

+91- 4564 – 229 640, +91- 94434 05585 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்தால பரமேசுவரியம்மன்

உற்சவர்: – முத்தாலம்மன்

தல விருட்சம்: – கடம்ப மரம்

தீர்த்தம்: – வைகை

ஆகமம்: – சிவாகமம்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – பரமக்குடி

மாவட்டம்: – ராமநாதபுரம்

மாநிலம்: – தமிழ்நாடு

முற்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன், விநோதமான போட்டி ஒன்றை அறிவித்தான். சிறிய துளையுடைய முத்துக்களை, கையால் தொடாமலேயே மாலையாக தொடுக்க வேண்டுமென்பதே போட்டி. அந்நாட்டில் வசித்த அறிஞர்கள் பலரும், மாலை தொடுக்க முயன்று, முடியாமல் தோற்றனர். அவ்வூரில் வசித்த வியாபாரி ஒருவரின் மகள், தான் மாலை தொடுப்பதாகக் கூறினாள். மன்னனும் சம்மதித்தான்.

அரசவைக்குச் சென்ற அப்பெண், ஓரிடத்தில் பாசி மணிகளை வரிசையாக அடுக்கினாள். மறுமுனையில், சர்க்கரைப் பாகு தடவிய நூலை வைத்தாள். சர்க்கரையின் வாசனை உணர்ந்த எறும்புகள், பாசிமணியின் துளை வழியே உள்ளே சென்று, நூலை இழுந்து வந்தன.

சமயம் பார்த்து காத்திருந்த அப்பெண், நூலை எடுத்து மாலை தொடுத்தாள். மகிழ்ந்த மன்னன், மதிநுட்பமான அப்பெண்ணை பாராட்டிப் பரிசு வழங்கியதோடு, அவளையே மணக்க விரும்பினான். அப்பெண் மறுத்தாள். மன்னன் அவளைக் கட்டாயப்படுத்தினான்.