Tag Archives: தஞ்சை

ஆனைமுகன் – தஞ்சை

தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள யானைமுகத்தன்.

அண்டபிண்ட நிறைந்துநின்ற வயன்மால் போற்றி
யகண்டபரி பூரணத்தி னருளைப் போற்றி
மண்டலஞ்சூ ழிரவிமதி சுடரைப் போற்றி
மதுரதமி ழோதுமகத் தியனைப் போற்றி
எண்டிசையும் புகழு மெந்தன் குருவைப் போற்றி
யிடைகலைபின் சுழிமுனையின் கமலம் போற்றி
குண்டலிக்கு ளமர்ந்த விநா யகனைப் போற்றி
குகமணியின் தாளிணைகள் போற்றி போற்றி.

தஞ்சைப் பெரியகோயில் கோபுரம்

தஞ்சைப் பெரியகோயில் கோபுரம் வானளாவி நிற்கிறது. இக் கற்றளியை எழுப்ப எத்தனை மனிதர்கள் எப்படி இத்தனை பெரிய கற்களை மேலேற்றினரோ? அத்துடன் அதில் உள்ள சித்திரங்கள், சிற்பங்கள் நம்மை “ஆ” வென வாயைப் பிளக்க வைக்கிறது.