Tag Archives: அனந்தமங்கலம்

அருள்மிகு முக்கண் நாற்கை ஆஞ்சநேயசுவாமி ஆலயம் மற்றும் அருள்மிகு ராஜகோபாலசுவாமி ஆலயம், அனந்தமங்கலம்

அருள்மிகு முக்கண் நாற்கை ஆஞ்சநேயசுவாமி ஆலயம் மற்றும் அருள்மிகு ராஜகோபாலசுவாமி ஆலயம், அனந்தமங்கலம்-609 307, நாகப்பட்டினம் மாவட்டம்,

+04364 -289888 (மாற்றங்களுக்குட்பட்டது)

சீதையை மீட்க இலங்கைக்குச் சென்றுவிட்டு வெற்றியுடன் ஸ்ரீராமபிரான் தனது பரிவாரங்களுடன் அயோத்திக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அவர்கள் வரும் வழியில் இருந்த பாரத்துவாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி இளைப்பாறினார்கள். அந்த நேரத்தில் அங்கு வந்த நாரத முனிவர்,” நடந்து முடிந்துவிட்ட யுத்தத்தில் பல அரக்கர்கள் மடிந்துவிட்டாலும், இன்னமும் சில அரக்கர்கள் தப்பி வந்து கடலுக்கு அடியில் அமர்ந்து கொண்டு, மேலும் அரிய சக்தியைப் பெற தவம் செய்தவாறு உள்ளனர். அவர்கள் மீண்டும் சக்தியைப் பெற்றுவிட்டால் அவர்களை அடக்க முடியாமல் போய்விடும். ஆகவே, அவர்கள் தவ வலிமை பெறு முன் அவர்களை அழித்து விட வேண்டும்என்று விண்ணப்பித்துக் கொண்டார்.