மல்லிகார்ஜுன சுவாமி கோயில், கீரனூர்

அருள்மிகு மல்லிகார்ஜுன சுவாமி கோயில், கீரனூர், திண்டுக்கல் மாவட்டம்.

 

பழநிக்கு வடக்கில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது கீரனூர். இது திண்டுக்கல், ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ளது. 1500 அடி உயரம் சிவலிங்க வடிவில் அமைந்துள்ள மலையொன்றைக் காணலாம். அதன் வடபாகத்தில் அமைந்துள்ளது மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில்.

பாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, விராடராஜனின் நாட்டில் தங்கியபோது, இந்த மலைப்பகுதிக்கும் வந்து சென்றனராம். புராணச்சிறப்பு பெற்ற திருத்தலம் கீரனூர்.

மலைஉச்சியிலும், பழமையான மல்லிகார்ஜுன சுவாமி கோயில் ஒன்று உள்ளது. ஒற்றையடிப் பாதையாக அமைந்துள்ள, ஆயிரத்துக்கும் மேலான படிகளைக் கடந்து செல்லவேண்டும். ஒருவர் பின்னே ஒருவராகச் செல்ல வேண்டிய குறுகலான பாதை அது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *