Category Archives: திருவாரூர்

பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்.

+91-4369-222 392, 94438 85316

மூலவர் பிறவி மருந்தீஸ்வரர்
அம்மன் பிரகன்நாயகி (பரியநாயகி)
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருத்துறைப்பூண்டி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

அரக்க குலத்தில், ஜல்லிகை என்ற பெண்மணியும் இப்பூமியில் பிறந்தாள். அரக்க குணங்களை விடுத்து, சிவபக்தியில் சிறந்து விளங்கினாள். கருணை உள்ளம் வாய்ந்த அப்பெண்ணுக்கு விருபாட்சன் என்ற இராட்சஷன் கணவனாக அமைந்தான். அவன் மனிதர்களையே உண்பவன். ஜல்லிகையோ, சாத்வீக உணவு உண்பவள். கணவனின் குணத்தை அவளால் மாற்ற முடியவில்லை. ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் மறைந்த தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். அவனைப் பிடித்த விருபாட்சன், அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள்.

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மானந்தகுடி

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மானந்தகுடி, திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 239389

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஏகாம்பரேஸ்வரர்
உற்சவர் சந்திரசேகரர்
அம்மன் காமாட்சி
தீர்த்தம் அனுமன் தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் மானந்தகுடி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

கார்த்தவீரியன் எனும் பக்தன் ஒருவன் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தான். ஒருசமயம் அவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தபோது, ஆஞ்சநேயர் அவனது பூஜைக்கு தொந்தரவு செய்தார். இதனால் கோபமடைந்த கார்த்தவீரியன், ஆஞ்சநேயரை சபித்து விட்டான். தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், விமோசனம் வேண்டி இத்தலத்திற்கு வந்தார். சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவன் அவருக்கு அம்பிகையுடன் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தருளினார். அந்த மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினார் ஆஞ்சநேயர். எனவே இத்தலம் அனுமன் ஆனந்த குடிஎன்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் மானந்தகுடிஎன்று மருவியது.