Category Archives: அரியலூர்

அருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர்

அருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர் மாவட்டம்.

+91- 99438 82368 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆலந்துறையார்(வடமூலநாதர்)
அம்மன் அருந்தவ நாயகி
தல விருட்சம் ஆலமரம்
தீர்த்தம் பிரம, பரசுராம தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பழுவூர்
ஊர் கீழப்பழுவூர்
மாவட்டம் அரியலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞான சம்பந்தர்

கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம்,”விளையாட்டாகத் தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்என்றார்.

அதன்படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் அம்பாள் அருந்தவநாயகிஎனப்படுகிறாள்.

பழுஎன்றால் ஆலமரம். எனவே சுவாமி ஆலந்துறையார்எனப்படுகிறார். தல விருட்சமான ஆலமரம் இப்பகுதியில் அதிகமாதலால் திருப்பழுவூர்என பெயர் பெற்றது. முதலாம் பராந்தக சோழன் காலத்தில் இங்கு திருப்பணி நடந்துள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயில் கிழக்கு நோக்கியது. கோயில் எதிரில் குளம் உள்ளது. அம்பாள் சன்னிதி தனியே உள்ளது. அர்த்தமண்டப சுவரையொட்டி காலசம்காரர், அர்த்தனாரீசுவரர், கல்யாணசுந்தரர், கங்காளர், பைரவர் ஆகியோருடைய உருவங்கள் உள்ளன. தென்புற மேடைமீது அறுபத்துமூவர், திரிபுராந்தகர், ரிஷபாரூடர் ஆகியோரது உற்சவத்திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தில் துர்கை, திருநாவுக்கரசர், சம்பந்தர், வினாயகர், வீரபத்திரர், சப்தமாதர்கள் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. இறைவன் நேரே பார்த்தல் தெரிகிறார். மிகவும் அழகான மூர்த்தம். நாடோரும் 4 கால பூஜைகள் நடைபெருகின்றன. 1974 இல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது . பங்குனியில் நடைபெரும் விழாவில் 3 ஆம் நாள் சுவாமி மேலப்பழுவூர் சென்று அங்குள்ள சமதக்னி முனிவருக்கு காட்சி தரும் ஐதீகம் நடைபெருகிறது.

அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திருமழபாடி

அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திருமழபாடி, அரியலூர் மாவட்டம்.

+91 04329 292 890, 97862 05278 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வைத்தியநாதசுவாமி, வஜ்ரஸ்தம்பநாதர், வயிரத்தூண் நாதர், வச்சிரதம்பேஸ்வரர்
அம்மன் சுந்தராம்பிகை, பாலாம்பிகை
தல விருட்சம் பனை மரம்
தீர்த்தம் கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
ஆகமம் காமிய ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மழுவாடி, திருமழபாடி
ஊர் திருமழபாடி
மாவட்டம் அரியலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், அப்பர், சுந்தரர்

மார்க்கண்டேய முனிவரின் பொருட்டு இறைவன் மழு ஏந்தி நடனமாடியதால் இத்தலம் மழுவாடி என்று பெயர் பெற்றது . இதுவே பின்பு மழபாடிஎன்றானது என்பர்.

பிரம்மனின் சத்திய லோகத்திலிருந்து புருஷாமிருகம் சிவலிங்கத்தையெடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டது. அதையறிந்த பிரம்மன் வந்து அச்சிவலிங்கத்தை மீண்டும் பெயர்க்க முயன்றபோது முடியாமல் போகவே,”இது வைரத்தூணோஎன்று சொல்லிப் புகழ்ந்ததால், இத்தல இறைவன் வஜ்ஜிரதம்பேஸ்வரர்ஆனார்.

திருவையாறில் வசித்த சிலாத முனிவர் குழந்தை பாக்கியம் வேண்டி சிவனை நோக்கித் தவம் இருந்தார். அப்போது அசரீரி தோன்றி,”முனிவரே! புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீர் யாகம் செய்யும் நிலத்தை உழும்போது, பூமியில் இருந்து ஒரு பெட்டி கிடைக்கும். அதனுள் இருக்கும் குழந்தையை எடுத்து வளர்த்து வாருங்கள். ஆனால், அந்தக் குழந்தை 16 ஆண்டுகள் தான் உயிர் வாழும்என்றது. சிலாதரும் அவ்வாறே செய்ய ஒரு பெட்டியில், மூன்று கண்கள், நான்கு தோள்கள், சந்திரனை அணிந்த முடியுடன் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டார். வியந்து போன அவர், பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திறக்க பழைய அடையாளங்கள் மறைந்து அழகிய குழந்தையாக மாறியிருந்தது. அதற்கு ஜபேசர்என பெயரிட்டார். குழந்தைக்கு 14 வயது ஆனதும், இன்னும் 2 ஆண்டுகள் தான் குழந்தை தன்னோடு இருக்கப்போகிறது என்பதை நினைத்த முனிவர் மிகவும் வருத்தப்பட்டார். இதனையறிந்த ஜபேசர் திருவையாறிலுள்ள அயனஅரிதீர்த்தக் குளத்தில் ஒற்றைக்காலில் நின்றும் கடும் தவம் புரிந்தார். நீரில் நின்று தவம் புரிந்த இவரை நீர்வாழ் உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தின்றன. இவரோ தவத்தை விடவில்லை. இவரது தவத்தில் மகிழ்ந்த சிவன், ஜபேசரை குணப்படுத்தி பூரண ஆயுளையும் தந்தார். அதன் பின் ஜபேசருக்கும், சுயசாம்பிகை என்ற பெண்மணிக்கும் திருமழபாடியில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னும் ஜபேசர் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து, சிவகணங்களின் தலைமைப்பதவியையும், கயிலாயத்தின் முதல் வாயில் காவல் உரிமையையும், நந்தி தேவர் என்ற பெயரையும் பெற்றார்.