முடக்குவாத நோய் நீங்க

முடக்குவாத நோய் நீங்க

நல்ல எலும்பு வைத்தியரை அணுகி, இப்பொழுதுள்ள நோயின் கடுமை மருந்துகளால் தீருமா? இல்லை; அறுவை சிகிச்சைதான் சிறந்ததா? என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதன்படி சிகிச்சை செய்யுங்கள்.

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானம்தான். உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இந்நோய் உள்ளது. மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறைதானாம். மருத்துவம் சொல்லுகிறது. அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:
1)
மூட்டழற்சி: இது பெரும்பாலும் வயதானவர்களுக்கு மட்டுமே வரும். இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
2)
முடக்குவாதம்: இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.
அறிகுறிகள்:
மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது. நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.
முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றமே.
முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

பாட்டி வைத்தியம்:
1.
நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்றுநான்கு முறை அருந்தலாம்.

6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும்.

இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்:
வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.
காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம். கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.


தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

முடக்கறுத்தான் என்பது நாம் அன்றாடம் காணுகின்ற ஒரு அற்புதமான மூலிகையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. இது மூட்டு வலி, முடக்கு வாதம், கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை பறித்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாப்பிடலாம். இது எளிமையாக நம் கைஅருகில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை. நாம் மூட்டு வலி, கை கால் வலி என்று டாக்டரிடம் போவதை விட வாரம் ஒரு முறை இதை சாப்பிட்டாலே எந்த மூட்டு சம்பந்தப்பட்ட நோயும் நம்மை அணுகாது என்பது உறுதி.

மலைக்கொழுந்தீஸ்வரர் திருமலை சிவகங்கை

பாலசுப்பிரமணியர்

சிவகிரி

திருநெல்வேலி

சிங்கீஸ்வரர் மப்பேடு திருவள்ளூர்

 

முக்தி கிடைக்க

முக்தி கிடைக்க

முக்தி பெற வேண்டும் என்பதே மனிதர்களாகப் பிறந்தவர்களின் ஒரே ஆசை. ஆனால் முக்தி எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எப்படி அடைவது என்பது தெரியாது. ஆனால் அடைவது மட்டும் வெகு கடினம் என்று சொல்லக் கேள்வி.

முக்தி அடையத் தகுதிகள்:

திருவாரூரில் பிறக்கவேண்டும். சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசிக்கவேண்டும். திருவண்ணாமலையை (அண்ணா மலையை) நினைக்கவேண்டும். காசியில் இறக்கவேண்டும்.

பிறப்பது, இறப்பது நம்மிடம் இல்லை. சிதம்பரம் வழியாக 50 தடவை சென்றாலும், இறங்கி, நடராஜரைப் பார்க்க இயலாது; அவ்வளவு வேலை. அட; சரிதான்; அண்ணாமலையையாவது நினைக்கலாமென்றால் முடியவில்லை. நமக்கு ஆயிரத்தெட்டு கவலைகள். ஆனால் முக்தி மட்டும் வேண்டும்.

ஆன்மிகவாதிகள் முக்தியைப் பற்றி என்னென்னவோ கூறுவார்கள். சாமானியனுக்குப் புரியாது. அவர்கள் சொல்லும் வழியில் செல்லுவதும் முடியாது. முக்தி எப்படிக் கிட்டும்?

கீழுள்ள ஆலயங்களுக்குச் சென்று, “அடுத்த பிறவி எனக்கு வேண்டாம்என்று மனமுருக வேண்டிக்கொண்டால் முக்தி கிட்டுமென பக்தர்கள் கூறுகின்றனர்.

ஆத்மநாதசுவாமி திருப்பெருந்துறை சிதம்பரம் கடலூர்
ஏகாம்பரநாதர் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
பரமபதநாதர் பரமேஸ்வர விண்ணகரம் காஞ்சிபுரம்
அற்புத நாராயணன் திருக்கடித்தானம் கோட்டயம்
அவிநாசியப்பர் அவிநாசி கோயம்புத்தூர்
பட்டீஸ்வரர் பேரூர் கோயம்புத்தூர்
பாலசுப்ரமணியன் சிறுவாபுரி சென்னை
விஸ்வநாதர் கண்ணாபட்டி திண்டுக்கல்
அரங்கநாதப் பெருமாள் ஸ்ரீரங்கம் திருச்சி
அழகிய நம்பிராயர் திருக்குறுங்குடி திருநெல்வேலி
அருணாச்சலேஸ்வரர் திருவண்ணாமலை திருவண்ணாமலை
முக்தீஸ்வரர் சிதலப்பதி திருவாரூர்
சிவலோகத்தியாகர் ஆச்சாள்புரம் நாகப்பட்டினம்
முல்லைவன நாதர் திருமுல்லைவாசல் நாகப்பட்டினம்
காயாரோகணேஸ்வரர் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
காளமேகப்பெருமாள் திருமோகூர் மதுரை
வாலீஸ்வரர் கோலியனூர் விழுப்புரம்
இலட்சுமி நரசிம்மர் பூவரசன்குப்பம் விழுப்புரம்