ராகு தோஷம் நீங்க

ராகு தோஷம் நீங்க

ராகு கேது தோஷம்:

ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 2ல் ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம். கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, அல்லது விவாகரத்து உண்டாகலாம்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 4ல் ராகு அல்லது கேது உள்ளது நாகதோஷம்தான். இருதய சம்பந்தமான நோய், சொத்து விஷயமான தகராறு, மனைவிக்கு ரோகம், குடும்பவாழ்க்கையில் அதிருப்தி, முதலிய கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 5 ல் ராகு அல்லது கேது இருப்பதால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும். ஆனால் 5ம் அதிபதி சுபர் சேர்க்கை பெற்று பலமாக இருப்பின் இந்த நாகதோஷம் நிவர்த்தி அடைந்து குழந்தைச் செல்வம் ஏற்படும்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 7ல் ராகு அல்லது கேது நிற்பது களத்திர தோஷம். இதனால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படலாம். தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு,
மனஸ்தாபம், அவநம்பிக்கை ஏற்படக்கூடும். சில தம்பதிகளிடையே பிரிவினை கூட நேரலாம்.
ஆனால் ஜாதகத்தில் 7ம் அதிபதி சுக்கிரன் பலமாக காணப்பட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும்,
லக்னம் அல்லது சந்திரனுக்கு 8 மிடத்தில் ராகு அல்லது கேது இருக்கும் நாகதோஷத்தால்
விஷக்கடி, நோய், குடும்பத்தில் சண்டைசச்சரவு, பிரிவினை, ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால்
8
வது வீட்டை சுபர் பார்த்தாலோ, 8ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 12ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதும் நாகதோஷம். இதனாலும் நோய் தொல்லை, விஷக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு, பண விரயமும் ஏற்படும். 12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ அல்;லது 12ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.
லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.

ஜாதகத்தில் இருப்பதை மாற்றமுடியாது. இந்த தோஷத்திலிருந்து விடுபட பரிகாரம் செய்யப் பணமில்லை. என்ன செய்ய? வேறு வழியில்லை. “பத்து பத்ததக்குச் செட்டியார் இருக்கிறார்.” அவர்தான் இறைவன். கீழுள்ள ஆலயங்களுக்குச் சென்று மனமுருக வேண்டிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

நாகராஜா சுவாமி நாகர்கோவில் கன்னியாகுமரி
நீலகண்டேஸ்வரர் (சவுந்தர்யேஸ்வரர்) இருகூர் கோயம்புத்தூர்
காளத்தியப்பர் காளஹஸ்தி சித்தூர்
சேஷபுரீஸ்வரர் திருப்பாம்புரம் திருவாரூர்
நாகநாதர் பாமணி திருவாரூர்
காளாத்தீஸ்வரர் உத்தமபாளையம் தேனி
நீலகண்டேஸ்வரர் இலுப்பைபட்டு நாகப்பட்டினம்
சொர்ணபுரீஸ்வரர் தெற்கு பொய்கைநல்லூர் நாகப்பட்டினம்
நாகநாதசுவாமி நாகநாதர் சன்னதி நாகப்பட்டினம்

பேச்சியம்மன்

சிம்மக்கல், மதுரை

மதுரை

காசி விஸ்வநாதர் (விசாலாட்சி) பழங்காநத்தம் மதுரை மதுரை

நாககன்னியம்மன்

தும்பூர்

விழுப்புரம்

நாகேஸ்வர சுவாமி பூவரசன் குப்பம் விழுப்புரம்

 

முன் ஜென்ம பாவம் விலக

முன் ஜென்ம பாவம் விலக

முன் ஜன்மம் உண்டா? இல்லையா? தெரியாது. அப்படியானால் அந்த ஜன்மத்தில் நாம் பாவம் செய்தது எப்படித் தெரியும்? இவைகளெல்லாம் தெரிந்தால்தானே அந்தந்தப் பாவத்திற்குப் பரிகாரம் தேடமுடியும். அப்பொழுதுதானே பாவம் விலகும். ஆக, இது இயலாத ஒன்று.

ஜாதகத்தில்தான் கண்ணாடி மதிரித் தெரிகின்றதே! அதற்கு இந்தப் பரிகாரம் செய்யவேண்டும். நான்தான் அதைச் செய்யவேண்டும். இவ்வளவு துகை ஆகும். உடனே கொடுங்கள்என்று சொல்லும் சோதிடர்களையும் போலி ஆசாமிகளையும் நம்பாதீர்கள்.

பரிகாரம் செய்யவேண்டுமெனப் பணம் செலவு செய்யாதீர்கள். அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள்.

இதெல்லாம் நம்பும்படியுமில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை என்றால் எல்லாவற்றையும் இறைவன் பொறுப்பில் விட்டுவிட்டு வருவதை எதிர்கொள்வது புத்திசாலித்தனம். கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வணங்கினால் எவ்வகைப்பாவமானாலும் கழிந்துவிடுமென பக்தர்கள் கூறுகின்றனர்.

ஆதிரத்தினேஸ்வரர் திருவாடானை இராமநாதபுரம்
அட்டாள சொக்கநாதர் மேலப்பெருங்கரை இராமநாதபுரம்
நவபாஷாண நவக்கிரகங்கள் தேவிபட்டிணம் இராமநாதபுரம்

ஜோதி மவுனகுரு நிர்வாணசுவாமிகள்

கசவனம்பட்டி

திண்டுக்கல்

திருக்கரையீஸ்வரர் பெரணமல்லூர் திருவண்ணாமலை
சுந்தரேஸ்வரர் அன்னப்பன்பேட்டை (திருக்கலிக்காமூர்) நாகப்பட்டினம்
ஆரண்யேஸ்வரர் திருக்காட்டுப்பள்ளி நாகப்பட்டினம்
காயாரோகணேஸ்வரர் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
அசலதீபேஸ்வரர் மோகனூர் நாமக்கல்
நஞ்சுண்டேஸ்வரர் நஞ்சன்கூடு மைசூரு