வயிற்று வலி நீங்க

வயிற்று வலி நீங்க

அடிக்கடி வயிற்று வலி வந்தால் குடற்புண் அல்லது அல்சர்ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அல்சர் மட்டுமே வயிற்று வலிக்கு பொதுவான காரணமாகாது. ஒரு சிலர் அல்சர் பிரச்சினைக்கு 5 ஆண்டுகளாக மருந்து சாப்பிட்டு வருகிறேன்; ஆனால் இன்னமும் குணமாகவில்லை என்று கூறுவார்கள்.
வயிற்று வலிக்குப் பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் முன் சிறுகுடல் புண் பிரச்னை. முன் சிறுகுடல் பகுதியில் புண் (டியோடினல் அல்சர்) ஏற்படுகிறது. சிலர் அல்சர் என தாங்களே முடிவு செய்து கொண்டு, மருந்துக் கடைகளுக்குச் சென்று சுயமருத்துவம் செய்வதோடு, பெரும் பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர். வயிற்றில் உள்ள பல உறுப்புகளில் எது பாதித்தாலும் வயிற்றில் வலி வரலாம். குறிப்பாக நெஞ்சு எரிச்சல் தொடர்பான பிரச்னை, பித்தப்பை கற்கள், பித்தக் குழாய் கற்கள், தொடர் கணைய அழற்சி, சிறுகுடல் சுருக்கம், பெருங்குடல் அழற்சி மற்றும் வயிற்றில் ஏற்படும் புற்று நோயோடு, முன் சிறு குடலில் ஏற்படும் புண்ணும் (அல்சர்) வயிற்று வலிக்கு ஒரு காரணமாகும்.
எனவே வயிற்று வலிக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்தல் மிக முக்கியம். குறிப்பாக உணவுக் குழாய் மற்றும் இரைப்பை இணையும் இடத்தில் உள்ள வால்வில் ஏற்படும் பிரச்னையால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. சில சமயங்களில் வயிற்று வலியோடு நெஞ்சு எரிச்சலும் இருக்கும். மன உளச்சல் மற்றும் அதிகமான காரம் சாப்பிடுவதால் இந்தப் பிரச்னை தீவிரமாகும்.
உணவு சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டால், அதற்கு முக்கியமான காரணம் பித்தப்பை கற்களாகும். உணவுக்குப் பின் அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் குடல் பிரச்னை குறிப்பாக சுருக்கம் மற்றும் புற்றுக் கட்டியாக இருக்கக்கூடும்.
பசி இல்லாத தன்மை மற்றும் மாதக்கணக்கில் நீடிக்கும் வயிற்று வலிக்கு புற்று நோய் காரணமாக இருக்கக்கூடும். மலக்குடலில் ஏற்படும் புற்று நோய் காரணமாக வயிற்று வலி, மலத்தில் ரத்தம் மற்றும் வயிற்றுப் பெருக்கம் போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம்.

அல்சர் மட்டுமே உள்ள நோயாளிக்கு அதிகமாகப் பசி எடுக்கும். உணவு சாப்பிட்ட பிறகு வயிற்று வலி குறையும். வயிற்று வலி மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலியாகக்கூட இருக்கலாம். எனவே வயிற்று வலி என்ற உடனேயே அல்சர் என்று கருதி, சுய மருத்துவம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வயிற்றில் குடல்வாலிலிருந்து மலக்குடல் வரையிலுள்ள பெருங்குடலில் எரிச்சலுடன் தோன்றும் வலி, மருத்துவத்தில் இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்என்று அழைக்கப்படுகிறது. இதனால் தசைகள் இழுத்துக் கொள்ளுதல், அடிவயிற்றில் வலி, வாயுவினால் வயிறு உப்புதல், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் பொதுவாக ஏற்படுகின்றன. வயிற்று வலி தொடரும்பட்சத்தில், உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப் பகுதி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எண்டோஸ்கோப்பி பரிசோதனைகளைச் செய்து கொள்தல் அவசியம். தேவைப்பட்டால் சி.டி. பரிசோதனை பரிந்துரைக்கப்படும். எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்யாமல் வயிற்று வலிக்கு அல்சர்காரணம் என யாரும் நினைக்க வேண்டாம்.

வயிற்றுவலி நீங்க:

2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடுநரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்தக் கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக்கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மாந்தம் குறையும்.

12 மிளகு, பாதியளவு பூண்டு, 5 வேலிப்பருத்தியின் நுனிக் கொழுந்து இவைகளை நன்றாக மை போல அரைத்துக் காலையில் மட்டும் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சூதக வயிற்று வலி குறையும்.

திருநாவுக்கரசர் எழுதியுள்ள பதிகம் பாடினால் வயிற்றுவலி நீங்கும் எனப் பக்தர்கள் நம்புகின்றனர். முடிந்தால் முயலுங்கள். இல்லையெனில் விழுப்புரம் மாவட்டம் கிளியனூரில் உள்ள அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் சென்று இறைவனை மனமுருக வேண்டிக்கொண்டால் வயிற்றுவலி தீர்ந்துவிடுமென பக்தர்கள் கூறுகின்றனர்.

லட்சுமி கடாட்சம் கிடைக்க

லட்சுமி கடாட்சம் கிடைக்க

செல்வத்துக்கு அதிபதி இலக்குமி. அவளின் கடாட்சம் கிட்டவேண்டுமாயின் அவளின் கால்களில் சரண் அடைவதைத் தவிர வேறு வழியில்லை. ஆகவே, கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபட, சிறப்பாக இலக்குமியை வழிபட அவளின் கடாட்சம் கிட்டும்; செல்வம் பெருகும்என்கின்றனர் பக்தர்கள்.

இலட்சுமி நாராயணர் புதூர் ஈரோடு
திருப்பதி வெங்கடாசலபதி மேல்திருப்பதி சித்தூர்
இலட்சுமி நாராயண பெருமாள் வேப்பஞ்சேரி சித்தூர்
இலட்சுமி கோபாலர் ஏத்தாப்பூர் சேலம்
இலட்சுமிநாராயணர் வரகூர் தஞ்சாவூர்
லட்சுமிநாராயணப்

பெருமாள்

அம்பாசமுத்திரம் திருநெல்வேலி

இலட்சுமி நரசிம்மர்

கீழப்பாவூர்

திருநெல்வேலி

அனந்த பத்மநாபசுவாமி திருவனந்தபுரம் திருவனந்தபுரம்
வெள்ளிமலைநாதர் திருத்தங்கூர் திருவாரூர்
இலட்சுமி நாராயணப்பெருமாள் சின்னமனூர் தேனி
தாமரையாள் கேள்வன் பார்த்தன் பள்ளி நாகப்பட்டினம்
திருவாழ்மார்பன் திருவல்லவாழ் பந்தனம் திட்டா
பதினெட்டுக்கை(அஷ்டதசபுஜ) மகாலட்சுமி துர்க்கை குறிச்சி புதுக்கோட்டை
லெட்சுமி ஹயக்ரீவர் முத்தியால் பேட்டை புதுச்சேரி
இலட்சுமி நாராயணர் காரிசேரி விருதுநகர்

லலிதசெல்வாம்பிகை (செல்லப்பிராட்டி)

செஞ்சி

விழுப்புரம்
லட்சுமி நரசிங்க பெருமாள் திண்டிவனம் விழுப்புரம்
இலட்சுமி நரசிம்மர் பூவரசன்குப்பம் விழுப்புரம்

லட்சுமி நாராயணி

திருமலைக்கோடி (ஸ்ரீபுரம்)

வேலூர்