மந்தபுத்தி நீங்க

மந்தபுத்தி நீங்க

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்ப்பதால், பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்தி, சகவாசமின்மை, முரட்டுத்தனம் ஆகிய பின்விளைவுகளை பெறுகின்றன. மந்த புத்தி என்பது, எதிலும் அக்கரையின்மை, அறிவுரைகளைக்கேட்டு உள்வாங்கி அதன்படி நடக்க இயலாமை, பிடிப்பற்ற தன்மை, எதையும் சட்டெனப் புரிந்துகொள்ளாமை…….

மந்தபுத்தி மாற:

வல்லாரை இலை தூள் 100 கிராம், வசம்பை 15 கிராம் இடித்து தூள் செய்து ஒன்றாக கலந்து தினசரி 5 கிராம் தேனுடன் சாப்பிட்டு வந்தால் மந்தபுத்தி மாறும்.

வெள்ளைப் பூசணிக்கையை வெட்டி சாறு பிழிந்து அதை சுத்தமான வாழை இல்லை மேல் ஒரு குவளையில் வைத்து, அதை சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணம் செய்து நன்றாக வணங்கி வேண்டிக்கொள்ளவும். பின்பு இந்த சாரை தொடர்ந்நது 48 நாட்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களின் மந்த புத்தி அவர்களை விட்டு ஓடி விடும்.

இதெல்லாம் இருக்கட்டும். இது முன் ஜென்ம பாவ வினை. ஆகையால் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடப் பலன் கிட்டும் என்பது சோதிடர் வாக்கு.

சரஸ்வதி

வடக்கன்பரவூர்

எர்ணாகுளம்

வில்வநாதேஸ்வரர் திருவல்லம் வேலூர்

போதைப் பழக்கத்திலிருந்து விடுபட

போதைப் பழக்கத்திலிருந்து விடுபட

தன் சிந்தனையை போதையில் புதைத்து மன மயக்கத்தையும், குழப்பத்தையும் தன்னைத்தானே மனிதன் ஏற்படுத்திக் கொள்கின்றான். போதைப் பொருட்களில் மது, பிரெளன் சுகர், கஞ்சா, புகையிலை, பான் மசாலா இன்னும் பல வகைகள்.

பள்ளிப் பருவத்திலோ அல்லது கல்லூரிகளிலோ படிக்கும் போது தீய நண்பர்களோடு ஏற்பட்ட பழக்கங்களினாலும் மற்றும் பொழுதுபோக்காகவும் பழகிக்கொண்ட பழக்கத்தை இன்று வரை விட்டு மீளமுடியவில்லை என வருத்தப்பட்டுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். பலமுறை இத்தீய பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும் என முயற்சி எடுத்து தோற்றுப் போனவர்களும் இருக்கிறார்கள். ஒன்றைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதையும் சேர்த்து அடிமையாகிக் கொண்டவர்களும் இருக்கின்றனர். கடின வேலை செய்பவர்கள் தங்கள் உடல் வலி மறந்து இருக்கவும் போதையைப் பயன்படுத்துகிறோம் என்று கூறுகிறார்கள். நிச்சயம் ஒரு நாள் மரணம் உண்டு, இதை விட்டு ஒழித்தால் மட்டும் மரணமின்றி வாழ்ந்துவிடலாமா? என தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டு தொடர்பவர்களும் இருக்கிறார்கள்.

இத்தகைய போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களின் குடும்ப வாழ்க்கை, சமுதாய மதிப்பு, வேலை, நட்பு, உறவினர்கள் என எல்லாவற்றிலும் விரிசல் ஏற்பட்டுவிடுகிறது. போதைக்கு அடிமையாகி இளமையிலேயே இறந்துவிடும் குடும்பத் தலைவனால் அக்குடும்பமே சிதைந்து சீரழிந்து விடுகின்றது.

போதைப் பழக்கத்தினால் முதலில் பாதிப்படைவது மனிதனின் நரம்பு மண்டலம். மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதித்து நினைவாற்றலைக் குறைக்கச் செய்கின்றது. இதன் காரணமாக சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்படுட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. உடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களினால் இதை உட்கொண்டவர்கள் மனதளவில் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். உடல் சோர்வடைதல், குற்ற உணர்ச்சி, தனிமையை நாடுவது போன்ற அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

போதை என்பது தனிமனிதனை மட்டும் பாதிக்கும் பழக்கம் என எண்ணிவிட இயலாது. இதனால் அவரைச் சுற்றியுள்ள சமுதாயமும் பாதிப்படைகின்றது. படிக்கும் வயதில் போதையைப் பயன்படுத்தினால் தம்முடைய படிப்பும் கெட்டு, தன்னோடு பழகும் சக நண்பர்களின் படிப்பையும் பாழ்படுத்திவிடுவது. பணிபுரிபவர்கள் போதைக்கு அடிமையானால் அலுவலக வேலையை இழந்து, தம்முடைய பொருளாதாரத்தை இழந்து குடும்பத்தை வறுமையில் கொண்டு சென்றுவிடுதல், குடும்ப மகிழ்ச்சி மற்றும் சமூக அந்தஸ்தை இழத்தல். வாகனம் ஓட்டுபவர்கள் போதையைப் பயன்படுத்துவதால் கவனம் சிதைந்து விபத்துக்களுக்கு உள்ளாகி உயிர் இழப்புகளை ஏற்படுத்துவது.

சிறிது சிறிதாக போதைப்பழக்கமானது அதிகரித்து அந்த அற்ப இன்பத்தைப் பெற்றுக்கொள்ள திருடுதல், பொய் பேசுதல் மற்றும் மானக்கேடான விஷயமாக இருந்தாலும் அதைச் செய்யத் துணிந்துவிடும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது. போதையின் கோரப்பிடியில் அகப்பட்டவர்கள் அஞ்சாமல் பாலியல் குற்றங்களிலும் ஈடுபட்டு அதன் மூலம் பல நோய்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

போதைக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்க எத்தனையோ மறுவாழ்வு மையங்கள் உள்ளன. அலோபதி, ஆயுர்வேதா, சித்தா என எத்தனையோ மருத்துவ முறைகளும் இருக்கின்றன. எனினும் யார் இறைவனிடம் நம்பிக்கை வைத்து, தன் மனதை அந்த நம்பிக்கையில் செலுத்தி, இது பாவம் என எண்ணிக் கைவிடுகின்றாரோ அவர்களால் மட்டும் தான் இத்தகைய பழக்கங்களிலிருந்து மீள்வது முடியும். ஆகவே, திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட விடியல் கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர்.